tamilnadu

தேசிய கல்விக் கொள்கை : மாநில அரசின் நிலைப்பாட்டை அறிவிக்க கோரிக்கை

சென்னை, பிப்.20- உயர் கல்வி மற்றும் பள்ளிக் கல்வித் துறைகளில் தேசியக் கல்விக் கொள்கை நடைமுறைப்படுத்துதல் குறித்த ஒன்றிய அரசுத்  துறைகளின் சுற்றறிக்கை கள், கருத்து கேட்பு கூட்ட  முடிவுகள் ஆகியவற்றின் மீது மாநில அரசின் நிலைப் பாட்டை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட வேண்டும் என்று என்று பொது பள்ளிக்கான மாநில மேடை கேட்டுக்கொண்டுள்ளது. இதுகுறித்து முதலமைச் சருக்கு மாநில மேடையின் நிர்வாகி பிரின்ஸ் கஜேந்தி ரபாபு அனுப்பியுள்ள மனு வருமாறு: தேசிய கல்விக் கொள்கை நடைமுறைப் படுத்துவது தொடர்பாக 2022 பிப்ரவரி 13 அன்றைக் குள்  கருத்து தெரிவிக்க வேண்டும் என்று குறிப்பி டப்பட்டிருந்தது. தற்போது 2022 பிப்ரவரி 21 வரை அவகாசம் தரப்பட்டுள்ளது. பார்வையில் குறிப்பிடப் பட்டுள்ள கடிதங்கள், உயர் கல்வித் துறையில் தேசியக் கல்விக் கொள்கை 2020யை நடைமுறைப் படுத்தும் வழி முறைகள் குறித்த ஆவணங் கள் குறித்தக் கருத்து கேட்பிற்கான அறிவிப்புகள். வரைவு நிறுவன மேம்பாடு திட்டம் வரைவு தேசிய உயர்கல்வித் தகுதிக்  கட்டமைப்பு  ஆகிய இரண்டு  ஆவணங்கள் குறித்துத் தமிழ்நாடு அரசு உயர்கல்வித் துறை என்ன கருத்தைத் தெரிவித்துள்ளது?

இது குறித்துத் தமிழ் நாடு அரசின் நிலைப்பாடு என்ன  என்பதைக் குறித்த எந்த  தெளிவான அறிவிப்பும்  இதுவரை வெளியிடப்பட வில்லை. இது குறித்து தமிழ் நாடு மாநில உயர் கல்வி மன்றத்  துணைத் தலைவர் அவர்கள் அண்மையில் ஒர் இதழுக்கு அளித்துள்ள பதில், உயர் பொறுப்பில் இருப்பவரிடமிருந்து எதிர் பார்க்கப்படும் பதிலாக அமையவில்லை. வரைவு தேசிய உயர்கல்வித் தகுதிக் கட்டமைப்பு குறித்து 2022, பிப்ரவரி 13 தேதியிட்ட கடிதம்  மூலம் பொதுப் பள்ளிக்கான மாநில மேடை ஒன்றிய அரசிற்கு தெரியப்படுத்திய கருத்துக்கள் மாநில அரசின் பார்வைக்கும் அனுப்பி வைக்கப்பட்டது. உயர்கல்வித் துறை போன்றே பள்ளிக் கல்வித் துறையிலும் பல்வேறு அறிவிப்புகள் தேசியக் கல்விக் கொள்கை 2020யின் பாதகமான அம்சங்களை நடைமுறைப்படுத்தும் வகையிலேயே உள்ளது. மக்களுக்கு அதிர்ச்சி தெரி யாமல் இருக்க பள்ளிக் கல்வித் துறையால் ஒரு  மென்மையான அணுகு முறை  கடைபிடிக்கப்படு கிறது. வெளிப்படைத் தன் மையுடன் விவாதிக்கப்ப டாமல் நடைமுறைக்கு வரும் பல அறிவிப்புகள் எதிர்காலத்தில் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும். முதல் அமைச்சர் உடனடி யாக நேரடிக் கவனம் செலுத்தி உரிய கொள்கை வழிகாட்டுதலை உயர் கல்வி மற்றும் பள்ளிக் கல்வித்  துறைகளுக்கு வழங்கிட வேண்டும் என்று பொதுப் பள்ளிக்கான மாநில மேடை கோருகிறது. இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.