வேலூர், மார்ச் 31- தமிழகத்தை கல்வியில் முதன்மை மாநிலமாக மாற்ற வேண்டும் என்று விஐடி வேந்தர் கோ. விசுவநாதன் வேண்டுகோள்விடுத்தார். அனைவருக்கும் உயர்கல்வி அறக்கட்டளை சார்பில் கல்வி உதவித் தொகை வழங்கும் விழா விஐடி அண்ணா அரங்கத்தில் வியாழ னன்று(மார்ச் 31) நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் வேந்தர் டாக்டர் கோ. விசுவநாதன் பேசுகையில்,“ இந்தியா வில் 775 மாவட்டங்கள் உள்ளன. அதில் எந்த மாவட்டத்திலும் இல்லாத திட்டம் தான் “அனைவருக்கும் உயர்கல்வித் திட்டம்” என்றார். அரசின் உதவி இல்லாமல் ஏழை மாணவர்கள் உயர்கல்வி பயில உதவும் திட்டம் தான் இது. இந்த திட்டம் 2012ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் மூலம் இதுவரை 6,824 மாணவர்களுக்கு 7 கோடியே 45 லட்சம் ரூபாய் கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார். இந்நிகழ்ச்சியில் வேலூர் கிறித்துவ மருத்துவ கல்லூரியின் இயக்கு நர் மருத்துவர் ஜே.வி. பீட்டர், அறக்கட்டளை உறுப்பினர் டாக்டர். எஸ். நர்மதா அசோக், அறக்கட்டளை உறுப்பினர்கள், ஜெ. லட்சுமணன் உள்ளிட்ட பலர் பேசி னர். அறக்கட்டளையின் திட்ட ஒருங்கிணைப்பாளர் சுந்தர்ராஜ் நன்றி கூறினார்.