tamilnadu

img

பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு 4ஜி, 5ஜி உபகரணங்கள் உடனடியாக வழங்க கோரிக்கை

பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு 4ஜி, 5ஜி  உபகரணங்கள் உடனடியாக வழங்க கோரிக்கை

திருச்சிராப்பள்ளி, மே 24-  அகில இந்திய பிஎஸ்என்எல் டி.ஓ.டி ஓய்வூதியர் சங்க 7 ஆவது மாவட்ட மாநாடு சனிக்கிழமை அன்று திருச்சியில் நடைபெற்றது.  மாநாட்டிற்கு மாவட்டத் தலைவர் ஜான்பாட்ஷா தலைமை வகித்தார். தேசிய கொடியை வடக்கு கிளை தலைவர் சுப்பிரமணியன் ஏற்றினார். சங்க கொடியை மாவட்ட துணைத் தலைவர் கிருஷ்ணன் ஏற்றினார். அஞ்சலி தீர்மானத்தை மாவட்ட உதவி செயலாளர் மனோகரன் வாசித்தார். மாவட்ட உதவி செயலாளர் ருக்மாங்கதன் வரவேற்றார். மாநிலச் செயலாளர் ராஜசேகர் துவக்க உரையாற்றினார். செயல்பாட்டு அறிக்கையை மாவட்டச் செயலாளர் சின்னையன் வாசித்தார். வரவு - செலவு அறிக்கையை மாவட்டப் பொருளாளர் அன்பழகன் சமர்ப்பித்தார்.  பிஎஸ்என்எல்இயூ மாநில அமைப்புச் செயலாளர் கார்த்திகேயன், மாவட்டச் செயலாளர் செல்வராஜ், ஏ.ஐ.பி.டி.பி.ஏ மாநில மகளிர் குழு மல்லிகா, என்சிசிபிஏ மாவட்டச் செயலாளர் கோபால்சாமி, டபிள்யூ டபிள்யூ சி சி கன்வீனர் விஜயலட்சுமி, டி.என். டி.சி.டபிள்யூ.யூ மாவட்டச் செயலாளர் முபாரக்அலி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.  மாநாட்டில் பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு 4ஜி, 5ஜி உபகரணங்கள் உடனடியாக வழங்க வேண்டும். பிஎஸ்என்எல் ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்களுக்கு ஓய்வூதிய மாற்றம் வழங்க வேண்டும். மெடிக்கல் அலவன்ஸ் மாதம் ரூ.3000 வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநாட்டில் புதிய நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது. இதில் மாவட்டத் தலைவராக கே. சின்னையன், மாவட்டச் செயலாளராக எஸ்.அஸ்லாம் பாட்சா, பொருளாளராக ஏ.சண்முகம் உள்பட 17 பேர் கொண்ட மாவட்டக் குழு தேர்வு செய்யப்பட்டது. சங்க மாநிலப் பொருளாளர் இளங்கோவன் நிறைவுரையாற்றினார். கிழக்கு கிளைச் செயலாளர் சண்முகம் நன்றி கூறினார்.