tamilnadu

ஆசிரியர் தகுதித் தேர்வை ஒத்திவைக்க வேண்டும்: முதல்வருக்கு மாற்றுத்திறனாளி சங்கம் கோரிக்கை

சென்னை, பிப். 10- மாற்றுத்திறன் தேர்வர்களுக்கு சிரமங்களை ஏற்படுத்தியுள்ள ஆசிரியர் தகுதித் தேர்வு நடை முறைகளை ஒத்திவைத்து நடத்த முதலமைச்சர் உத்தரவிட வேண்டும் என தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து மாநிலத் தலைவர் பா.ஜான்சி ராணி, பொதுச் செயலாளர் எஸ்.நம்புராஜன்  ஆகியோர் முதல்வ ருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறி யிருப்பதாவது:- தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் பிப்ரவரி 12 முதல் 20ஆம்  தேதி வரை ஆசிரியர் தகுதித்தேர்வு கள் நடத்துகிறது. இந்த வாரியம்  செயல்படுத்தியுள்ள மாற்றுத்திறனா ளிகள் விரோத தேர்வு நடைமுறைகள், தேர்வுகளை எதிர்பார்த்துக் காத்தி ருந்த பார்வை பாதிப்பு உள்ளிட்ட  ஆயிரக்கணக்கான மாற்றுத்திறன் தேர்வர்களை கடும் பாதிப்புக்குள் ளாக்கி உள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரிய தலைவருக்கு தமிழ்நாடு  அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைக ளுக்கான சங்கம் வியாழனன்று அனுப்பி யுள்ள மனுவில் மாற்றுத்திறன் தேர்வர்களுக்கு ஏற்பட்டுள்ள கடும்  சிரமங்கள் குறித்து விவரிக்கப்பட் டுள்ளன. குறிப்பாக வசிப்பிடங்களில் இருந்து தொலைதூர மாவட்டங்களில் மையங்கள் நிச்சயிக்கப்பட்டுள்ளன. அவர்கள் உரிய முறையில் தேர்வு களை எழுத முடியாதபடி தேர்வு வாரியம் கடும் சிரமங்களை கொடுத் துள்ளது, தடைகளை ஏற்படுத்தி உள்ளது.  எனவே , ஏற்பட்டுள்ள சிரமங்களை யும்,  மன உளைச்சளையும் போக்கிட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மாற்றுத்திறன் தேர்வர்களுக்கு மட்டுமாவது தேர்வுகளை ஒத்தி வைத்து, உரிய வாய்ப்புகளை வழங்கும் நடைமுறைகளுடன் தகுதித் தேர்வுகளை விரைவில் நடத்த தமிழக முதலமைச்சர் உத்தரவிட வேண்டும் என தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாது காப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.