மதுரை, அக்.29- மாநகராட்சிகளில் “அவுட்சோர் சிங்” முறையை அமல்படுத்த வேண்டு மென தமிழக அரசு வெளியிட்டுள்ள ஆணை மாநகராட்சி ஊழியர்கள் மத்தி யில் கடும் அதிர்ச்சியையும் ஏமாற்றத் தையும் ஏற்படுத்தியுள்ளது. அரசு ஆணையை வெளியானதைத் தொடர்ந்து மதுரையில் தமிழ்நாடு நக ராட்சி, மாநகராட்சி அலுவலர் சங்கக் மாநில நிர்வாகிகள் கூட்டம் சனிக் கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத் தில் மாநிலத் தலைவர் கா.முரு கானந்தம், மாநிலப்பொதுச் செய லாளர் மு.தாமோதரன், மாநிலப் பொரு ளாளர் இரா.சுவாமிநாதன், துணைப்பொதுச் செயலாளர் சி.எம்.மகுடீஸ்வரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில், திமுக அரசு பொறுப்பேற்றபிறகு முன்னேறிச் செல்லமுடியும் என நம்பியிருந்தோம். இப்போது மீண்டும் நாம் பின்னோக்கிச் செல்ல வேண்டியுள்ளது. இருக்கும் வேலையை பாதுகாக்க வேண்டி யுள்ளது எனக் கூறினர். திமுக தன்னுடைய தேர்தல் கால வாக்குறுதியில் பத்தாண்டுகளுக்கு மேலாக தினக்கூலி, தொகுப்பூதியம், மதிப்பூதியம் மற்றும் வெளிமுகமை மூலம் பணியாற்றும் ஊழியர்களை நிரப்படுத்தி காலமுறை ஊதிய விகி தம் வழங்கப்படும் எனக் கூறியிருந் தது. தற்போதைய அரசாணை ஏமாற்றத் தையே அளித்துள்ளது. மாநகராட்சிகளில் மக்களின் அடிப் படைத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் தூய்மைப் பணி, தெருவிளக்கு பராம ரிப்புப் பணி ஆகியவை பகுதி யாக தனியார் வசம் ஒப்படைக்கப் பட்டுள்ளதால் மக்களின் அடிப்படைத் தேவைகள் முழுமையாக நிறை வடையாத நிலை உள்ளது.
இப்போது வரிவசூல் பணி, தூய்மைப் பணி, குடிநீர் வழங்கல், தெருவிளக்கு பராம ரிப்பு முறையாக தனியாரிடம் ஒப்ப டைக்கும் நிலை ஏற்படுகிறது. இனி வரும் காலங்களிலும் இதுவே தொட ரும் என்ற அறிவிப்பு தமிழக அரசு தனியார்மயப் போக்கினை ஆதரிக்கும் செயலாக உள்ளது. மக்களின் அடிப் படைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய இயலாத நிலை ஏற்படுவதுடன் பட்டி யலின மக்களுக்கு அரசு வேலை என்பது மறுக்கப்படுவதுடன் மாநகராட்சி ஊழியர்களின் கருணை அடிப்படைப் பணி நியமன வாய்ப்புகளும் இல்லா மல் போகும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அரசா ணையை பரிசீலனை செய்ய வேண்டும். டி பிரிவு ஊழியர் பணியிடங்களை தோற்றுவிக்க வேண்டும். மாநகராட்சி ஊழியர்கள் பதவி உயர்வு பெறும் வகையில் புதிய அரசாணையை வெளியிட வேண்டுமென்றனர். கூட்டத்தில் தமிழ்நாடு நெடுஞ் சாலைத்துறை சாலைப் பணியாளர் சங்க மாநிலப் பொருளாளர் இரா. தமிழ், சிஐடியு மாநகராட்சி தொழி லாளர் சங்க மாவட்டத் தலைவர் மீனாட்சிசுந்தரம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.