புதுப்பொலிவு பெற்ற சிபிஎம் மாநிலக்குழு அலுவலகம்; நவம்பர் புரட்சி தின உற்சாகம்
சென்னை, நவ. 7 - விடுதலைப் போராட்ட வீரரும், இந்திய கம்யூனிச இயக்கத்தின் முன்னோடியும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை உரு வாக்கிய தலைவர்களில் ஒருவருமான தோழர் பி.ராமமூர்த்தி அவர்களது உருவச் சிலை செவ்வாயன்று (நவ.7) சென்னையில் திறக்கப்பட்டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு அலுவலகமான பி.ராமமூர்த்தி நினைவகத்தில் நவம்பர் புரட்சி தினம், பி. ராமமூர்த்தி சிலைசிறப்பு மற்றும் மாநிலக் குழு அலுவலக புதுப்பிக்கப்பட்ட கட்டி டத்தில் எம்.ஆர்.வெங்கட்ராமன் அரங்கம் திறப்பு விழா செவ்வாயன்று (நவ.7) எழுச்சி யுடனும் உற்சாகத்துடனும் நடைபெற்றது. மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் மத்தியக்குழு உறுப்பினர் பி.சம்பத் செங்கொடியேற்றினார். அலுவலக வளா கத்தில் அமைக்கப்பட்டுள்ள தோழர் பி.ராம மூர்த்தி மார்பளவு உருவச் சிலையை மூத்த தலைவர் அ.சவுந்தரராசன் திறந்து வைத்தார். கட்சியின் புதுப்பிக்கப்பட்ட இணைப்புக் கட்டிடத்தில் உள்ள தோழர் எம்.ஆர். வெங்கட்ராமன் அரங்கை மூத்த தலைவர் டி.கே.ரங்கராஜன் திறந்து வைத்தார். அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் வாழ்த்துரை வழங்கி னார். முன்னதாக மத்தியக்குழு உறுப்பினர் உ.வாசுகி வரவேற்றார். மாநிலக்குழு உறுப்பினர் வெ.ராஜசேகரன் நன்றி கூறி னார். இந்த நிகழ்வில் கட்சியின் மத்தியக் கட்டுப்பாட்டுக் குழுத் தலைவர் ஏ.கே.பத்மநாபன், மத்தியக்குழு உறுப்பினர் பெ. சண்முகம், மாநிலச் செயற்குழு, மாநிலக்குழு உறுப்பினர்கள், மாவட்டச் செயலாளர்கள் மற்றும் தோழர் பி.ராமமூர்த்தியின் மகள்கள் பொன்னி, வழக்கறிஞர் ஆர்.வைகை குடும்பத்தினர் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். விழாவில் கட்டிடப் பொறியாளர் ராஜூ, உள்ளரங்க வடிவமைப்பாளர் ரவிசங்கர், தோழர் பி.ஆர்.சிலையை வடிவமைத்த சிற்பி பேராசிரியர் கே.ராஜேந்திரன் ஆகியோர் கௌரவிக்கப்பட்டனர்.