tamilnadu

மீனவர்க்கான நிவாரணம் ரூ. 8 ஆயிரமாக உயர்வு

மீனவர்க்கான நிவாரணம் ரூ. 8 ஆயிரமாக உயர்வு

சென்னை, மே 28 - சென்னை திருவொற்றியூரில் அரசின் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் ரூ. 272.70 கோடி யில் அமைக்கப்பட்டுள்ள புதிய சூரை  மீன்பிடித் துறைமுகம் உள்ளிட்ட ரூ. 426.13 கோடி செலவில் மேம் படுத்தப்பட்ட மீன்பிடித் துறை முகங்கள், மீன் இறங்கு தளங்கள் மற்றும் மீன் விதைப் பண்ணை என 13 முடிவுற்ற திட்டப்பணிகளை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் புதனன்று திறந்து வைத்தார். அப்போது, “கடின உழைப்பாலும் தியாகத்தாலும் பண்பாட்டினுடைய அடையாளமாக திகழக்கூடிய மீனவர் சமுதாயத்தினருக்கு சூரை  மீன்பிடித் துறைமுகம் பெரும் வாய்ப்பாக இருக்கும்” என்று  கூறியதுடன்,  “மீன்பிடி தடைக் காலத்தில் மீனவர் வாழ்வாதாரத் திற்காக வழங்கப்படும் தொகை ரூ. 8 ஆயிரமாக உயர்த்தப்படும்” என்றும் அறிவித்தார். “அரசு எடுத்த நடவடிக்கைகளால் இதுவரை 1,154 மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டு மீட்கப்பட்டனர்.  எஞ்சியுள்ள 23 மீனவர் களையும் மீட்க நடவடிக்கை எடுத்து வரு கிறோம். நமது மீனவர்கள் இன்னல் களை நீக்க கச்சத்தீவை மீட்பதே ஒரே வழி” என்றும் அவர் கூறினார்.