tamilnadu

img

அண்ணாசாலையில் உயர்மட்ட பாலம் மாதிரி படங்கள் வெளியீடு

சென்னை, ஏப். 13 - சென்னை அண்ணா சாலையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க புதிதாக மேம்பாலம் கட்டப்பட உள்ளது. இந்த புதிய உயர்மட்ட சாலையின் மாதிரிப் படங்கள் வெளியிடப்பட்டுள்ளது. அண்ணா சாலையானது சுமார் 400 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. சென்னை யின் அடையாளமாகவும் உள்ளது. இந்த சாலையில் 24 மணி நேரமும் வாகனங்கள் சென்று கொண்டிருக்கும். இரவு நேரங்களில் கூட போக்குவரத்து நெரிசல் ஏற்படும் வகை யில் அமைந்துள்ள பிரதான சாலை என்பது குறிப்பிடத்தக்கது. இந்தச் சாலையில் இந்திய ராணுவத்தின் தென்மண்டலத் தலைமையகம். ஓமந்தூரார் பல்நோக்கு அரசு மருத்துவமனை, எல்.ஐ.சி. அமெரிக்க துணை தூதரகம், சுகா தாரத்துறை வளாகம், டிஎம்எஸ், அறி வாலயம், மெட்ரோ அலுவலகம், நந்தனம் ஆண்கள் கல்லூரி, நந்தனம் ஒய்எம்சிஏ மைதனாம் போன்றவை அமைந்துள்ளன. இந்தச் சாலையில் குறிப்பாக தேனாம் பேட்டை முதல் சைதாப்பேட்டை வரை உள்ள சுமார் 3.5 கி.மீ தூரத்திற்கு கடும் போக்கு வரத்து நெரிசல் ஏற்படும். காலை, மாலை நேரங்களில் இந்த தூரத்தை கடக்க 30 நிமிடங்களுக்கு மேலாகும். எனவே, எல்டாம்ஸ் சாலை சந்திப்பு, எஸ்ஐஇடி கல்லூரி சாலை சந்திப்பு,  செனடாப் சந்திப்பு, நந்தனம் சந்திப்பு, சிஐடி நகர் சந்திப்பு, தாடண்டர் நகர் - ஜோன்ஸ் சாலை சந்திப்பு ஆகிவற்றை இணைக்கும் வகையில் புதிய பாலம் 485 கோடி ரூபாய் செலவில் அமைக்கிறது. அறிவாலயம் அருகே தொடங்கும் மேம்பாலம் சைதாப்பேட்டை பேருந்து நிலையம் அருகே வந்து இறங்குகிறது. சாலை யின் மையப்பகுதியில் ஒற்றை தூணில் அமையும் இந்த பாலம் 4 வழிப்பாதை கொண்ட தாக இருக்கும்.