காவிரி ஆற்றுப்பாலத்தின் உறுதித்தன்மை குறித்து ஆய்வு
நாமக்கல், அக்.5- காவிரி ஆற்றுப் பாலத்தின் உறுதித் தன்மை குறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். நாமக்கல் - ஈரோடு மாவட்டத்தை இணைக்கும் வகையில், பள்ளிபாளை யம் பகுதியில் காவிரி ஆற்றின் குறுக்கே, காமராஜர் ஆட்சிக்காலத்தில் 32 பில்லர், 33 தாங்கு தளத்துடன் 449.80 மீட்டர் நீளத்திற்கு பாலம் கட்டப்பட்டு 1960 இல் திறக்கப்பட்டது. சில ஆண்டு களுக்கு முன்பு ஆற்றில் பெரும் வெள் ளம் ஏற்பட்டது. இருப்பினும் அனைத்து இடர்பாடுகளையும் தாண்டி இன்றள வும் பயன்பாட்டில் உள்ளது. பாலம் கட் டப்பட்டு 64 ஆண்டுகள் நிறைவடைந்த தால், பாலத்தின் உறுதித்தன்மை குறித்து நெடுஞ்சாலைத்துறையினர் சனியன்று ஆய்வு செய்தனர். அப் போது பாலத்தின் மேற்பரப்பில் உள்ள கான்கிரீட் தளம், பாலத்தின் இருபுறத்தி லும் உள்ள பாதுகாப்பு சுவர், பாலத் தின் உயரம், அகலம், நீளம், விரிசல், பாலத்தின் அடிப்பகுதியில் உள்ள பில் லர்கள், தாங்கு தளத்தின் கான்கிரீட் தன்மை உள்ளிட்டவை குறித்து ஆய்வு செய்தனர். தொடர்ந்து ஆற்றின் குறுக்கே உள்ள பில்லர்கள் உறுதியை பரிசலில் சென்று ஆய்வு செய்தனர். இந்த ஆய்வின் போது, தேசிய நெடுஞ்சாலை கோட்டப் பொறியாளர் சண்முகசுந்தரம், நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு சேலம் கண்காணிப்புப் பொறியாளர் சசிகுமார், உதவி கோட்டப் பொறியா ளர் வெ.நடராசன், உதவி பொறியா ளர்கள் மணிகண்டன் மற்றும் மோகன் ராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர். ஏற்கனவே, கடந்த சில வாரங்களுக்கு முன்பு சென்னையில் இருந்து வந்த நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் பாலத்தை ஆய்வு செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
