சென்னை, ஏப்.23- தமிழகத்தில் 10,11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மே முதல் வாரத்தில் இருந்து பொதுத்தேர்வுகள் நடை பெறுகின்றன. இதற்கிடை யில் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக் கான செய்முறைத்தேர்வு கள் வரும் திங்கட்கிழமை முதல் நடைபெற உள் ளது. இதற்கான சுற்ற றிக்கைகள் அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் வெளியிட் டுள்ளனர். இதில் முக்கிய மாக செய்முறைத் தேர் வுக்கான நேரம் 3 மணி நேரத்தில் இருந்து 2 மணி நேரமாக குறைக்கப்பட் டுள்ளது. கடந்த காலங்களில் செய்முறைத் தேர்வுக் கான மதிப்பெண்கள் 50 ஆக இருந்தது. இது தற்போது 30 ஆக குறைக் கப்பட்டுள்ளது. இதில் 10 மதிப்பெண்கள் அக மதிப்பீட்டு மதிப்பெண் ணாக வழங்கப்படுகிறது. எனவே மாணவர்கள் 20 மதிப்பெண்களுக்கு மட்டுமே செய்முறைத் தேர்வுகளை எழுது கின்றனர். மதிப்பெண்கள் குறைந்துள்ள காரணத்தி னாலும், கூடுதல் நேரம் இருக்கின்ற காரணத்தி னாலும், தேர்வுகளை விரைவாக முடிப்பதற்கா கவும் இந்த தேர்வுகள் 3 மணியில் இருந்து 2 மணி நேரமாக குறைக்கப்பட் டுள்ளது. இந்த நேரம் குறைப்பினால், மாண வர்களுக்கு எவ்வித சிக்க லும் இருக்காது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.