tamilnadu

img

தென்முடியனூரில் தலித் மக்களின் வழிபாட்டு உரிமை மீட்பு

திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு வட்டம் தென்முடியனூர் ஊராட்சியில் இந்து சமய அறநிலையத்துறைக்கு உட்பட்ட ஸ்ரீமுத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இங்கு சாதி ஆதிக்க சக்திகளால் நீண்டகாலமாக தலித் மக்களுக்கு உரிமை மறுக்கப்பட்டு வந்தது. செப்டம்பர் 30 தோழர் சீனிவாசராவ் நினைவுநாளையொட்டி தீண்டாமை ஒழிப்பு முன்னணியும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் ஆலயநுழைவு போராட்டம் அறிவித்ததை தொடர்ந்து அரசு தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதன் பின்னணியில், சனிக்கிழமையன்று தலித் மக்கள் தங்களின் வழிபாட்டு உரிமை மீட்புப் போராட்டத்தை நடத்தி வெற்றி கண்டனர். சிபிஎம் மாவட்டச் செயலாளர் எம்.சிவக்குமார், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டத் தலைவர் எஸ்.ராமதாஸ், மாவட்டச் செயலாளர் ப.செல்வன் உள்ளிட்டோர் போராட்டத்திற்கு தலைமையேற்றனர்.