tamilnadu

img

ஆக்கிரமிப்பில் இருந்த ரூ.100 கோடி அரசு நிலம் மீட்பு

சென்னை, ஆக.18- செங்கல்பட்டு மாவட்டம், பல்லாவரம் வட்டம், செயிண்ட் தாமஸ் மவுண்ட் கிராமத்தில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்த 41,952 சதுர அடி நிலம் வெள்ளி யன்று (ஆக.18) மாவட்ட நிர்வாகத் தால் மீட்கப்பட்டது. இந்த நிலம் வருவாய் பதி வேட்டில் காலம் கடந்த குத்தகை நிலம் எனத் தாக்கலாகியுள்ளது. இதனை கோயில் பயன்பாட்டிற்கு தற்காலிகமாகப் பயன்படுத்திக் கொள்ள காசி விஸ்வநாதர் தேவஸ் தானத்திற்கு தமிழ்நாடு அரசால் அனுமதி வழங்கப்பட்டிருந்தது. பின்னர் இந்த இடம் கோயில் பயன்பாட்டிற்கு இல்லாமல் பிற நபர்களால் ‘வன்னியர் சங்கக் கட்டிடம்’ என்ற பெயரில் கட்டிடம் கட்டி ஆக்கிரமிக்கப்பட்டதோடு அதன் மூலம் அரசுக்கு குத்தகை தொகை எதுவும் செலுத்தப்படாமல் இருந்து வருகிறது. எனவே, மேற்படி அரசு நிலத்தில் பல ஆண்டுகளாக ஆக்கிர மிப்பு செய்யப்பட்டுள்ளதை அகற்ற தமிழ்நாடு நில ஆக்கிரமிப்பு சட்டம்  1905 பிரிவு 7 மற்றும் 6-ஆகியவற்றின் கீழ் பல்லாவரம் வட்டாட்சியர் அலுவலகம் மூலம் 28-11-2022 மற்றும் 6-3-2023 ஆகிய தேதிகளில் அறிக்கை வழங்கப்பட்டன. ஆக்கிரமிப்பு செய்தவர்கள் மேற்படி ஆக்கிரமிப்புகளை அகற்றி  கொள்ளாத நிலையில், சுமார் ரூபாய் 100 கோடி மதிப்பிலான சுமார்  ஒரு ஏக்கர் நிலத்தை பல்லாவரம் வட்டாட்சியர் மூலம் அரசின் வசம் கொண்டு வரும் பொருட்டு பூட்டி சீலிட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது  என்று செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல் நாத் தெரிவித்துள்ளார். இந்த  இடத்தை  சென்னை மெட்ரோ ரயில்  பணிகளுக்கு பயன்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.