சென்னை, பிப். 20- நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான சாதாரணத் தேர்தல் சனிக்கிழமை (பிப். 19) நடைபெற்றது. அதில் 5 வார்டுகளில் 7 வாக்குச்சாவடிகளில் திங்கட்கிழமை (பிப்.21) மறுவாக்குப்பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: 5 வார்டுகளுக்கு உட்பட்ட 7 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு திங்கட்கிழமை (பிப். 21) நடைபெற உள்ளது. மறுவாக்குப்பதிவு நடைபெறும் இடங்கள்: சென்னை மாநகராட்சி வண்ணாரப்பேட்டை வார்டு எண் 51 , வாக்குச்சாவடி எண் 1174 ஏவி, பெசன்ட் நகர் ஓடைக்குப்பம் வார்டு எண் 179 , வாக்குச்சாவடி எண் 5059 ஏவி, மதுரை மாவட்டம் திருமங்கலம் நகராட்சி வார்டு எண் . 17 , வாக்குச்சாவடி எண் . 17 பெண்கள், அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் நகராட்சி வார்டு எண் 16 வாக்குச்சாவடி எண் . 16 ஆண்கள் , 16 பெண்கள், திருவண்ணாமலை நகராட்சி வார்டு எண் 25 வாக்குச்சாவடி எண் , 57 ஆண்கள், 57 பெண்கள். மேலே குறிப்பிட்டுள்ள 5 வார்டுகளில் 7 வாக்குச்சா வடிகளில் மறுவாக்குப்பதிவு திங்கட்கிழமை (பிப். 21) காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறும் . கடைசி ஒரு மணி நேரம் , அதாவது , மாலை 5.00 மணி முதல் 6.00 மணி வரை கொரோனா அறிகுறி உள்ளவர்கள் மற்றும் பாதிப்புக்கு உள்ளானவர்கள் மட்டும் வாக்களிக்க அனுமதிக்கப்படுவர். மறுவாக்குப்பதிவு நடைபெறும் இடங்களில் வாக்களிக்கும் வாக்காளர்களுக்கு இடது கை நடுவிரலில் அழியா மை பதிவு செய்யப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.