tamilnadu

img

ஆளுநரை திரும்பப்பெற சிபிஎம் போராட்டம்

ராணிப்பேட்டை, டிச.17- ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்து தமிழக அரசு கொண்டு வந்தி ருக்கும் சட்டத்திற்கு அனுமதி கொடுக்க மறுக்கும் ஆளுநரை திரும்பப்பெறக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போராட்டம் நடத்தும் என்று மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் தெரி வித்தார். ராணிப்பேட்டை மாவட்டம், ஆற் காட்டில் நடந்த கட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கே.பாலகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:- தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தை தடுப்பதற்கு சட்டம் இயற்றினாலும் ஆளுநர் ஒப்புதல் தர  மறுத்து வருவதால் சூதாட்டம் வலுவாக நடந்து வருகிறது. இதன் விளைவுகள், நாளுக்கு நாள் தற்கொலை அதிகரித் துக்கொண்டே வருகிறது. ஆனாலும், மசோதாவுக்கு ஒப்புதல் தராமல் ஆளு நர் காலம் தாழ்த்தி வருவது, மக்கள் மீது அக்கறை இல்லை என்பதை காட்டுகி றது. ஒன்றிய மோடி அரசும் தமிழக ஆளு நரும் மக்களை பற்றி கவலைப்படாமல்  உள்ளதால் ஏழை-எளிய, நடுத்தர குடும்பங்கள் பாதிக்கப்படுகின்றன. தமி ழக அரசு கொண்டு வந்துள்ள சட்டத்  திற்கு ஒப்புதல் கொடுக்காமல் இழுத்த டித்துக் கொண்டிருக்கும் ஆளுநர் ரவியை  திரும்பப் பெற வலியுறுத்தி விரைவில் மிகப்பெரிய போராட்டம் நடத்த தீர்மா னித்திருக்கிறோம்.

பந்தூரில் விமான நிலையம், நெய்வேலியில் நிலக்கரி சுரங்கம் விரி வாக்கம், ராணிப்பேட்டையில் மின் கோபுரங்கள், 8 வழிச் சாலை, 4 வழிச் சாலை என்று விவசாய நிலங்கள் கைய கப்படுத்தப்படுகின்றன. தொழில் வளர்ச்சி என்பது மிகவும் அவசியமா னது தான். ஆனால், கிராமப்புற விவ சாயிகளை காவு கொடுப்பதும், விவ சாயத்தை அழிப்பதும் எந்த விதத்தி லும் மக்களுக்கு பயன்படாது.  ஏற்கனவே, ஒன்றிய அரசின் தவ றான கொள்கைகளால் பரிதவித்து வரும் விவசாயிகளை தொழில் வளர்ச்சி, தொழிற்சாலைகள் அமைக்கிறோம் என்ற பெயரில் மூன்றாம், நான்காம் தர மக்களாக கருதி அப்புறப்படுத்துவது தேவையற்றதாகும். கோவை மாவட்டம் அன்னூர் பகு தியில் சிப்காட் அமைப்பதற்கு விளை நிலங்களை கையகப்படுத்துவதை எதிர்த்து விவசாயிகள் பல கட்ட போராட்டங்களை நடத்தினர் தற்போ தைய பிரச்சனையில் தமிழக அரசு சிப்  காட் அமைப்பதற்கு அரசு நிலம் மட்டுமே  பயன்படுத்தப்படும் விவசாயிகள் பாதிக்கப்பட மாட்டார்கள் எனக் கூறி யுள்ளது நம்பிக்கையளிக்கிறது. இவ்வாறு கே.பாலகிருஷ்ணன் தெரிவித்தார். மாவட்டச் செயலாளர் என்.காசி நாதன் உடனிருந்தார்.