இராமேஸ்வரம்,மார்ச் 8- தமிழக மீனவர்கள் கச்சத்தீவு அருகே நடுக்கடலில் மீன்பிடிக்கும் போது எல்லைதாண்டி வந்து மீன் பிடித்ததாக இலங்கை கடற்படையினரால் அடிக்கடி சிறைபிடிக்கப்பட்டு வருகின்றனர். கடந்த சில மாதங்களாக ராமேசுவரம் மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் அடுத்தடுத்து சிறைபிடிக்கப்பட்டு இலங்கை சிறையில் அடைக்கப்பட்டனர். கடந்த மாதம் 7 ஆம் தேதி ராமேசு வரத்தை சேர்ந்த 11 மீனவர்கள் 3 விசைப்படகுகளில் சென்று கச்சத்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது அவர்களை இலங்கை கடற்படை யினர் சிறைபிடித்தனர். மேலும் அவர்களது 3 விசைப்படகுகளை பறிமுதல் செய்தனர். சிறைபிடிக்கப்பட்ட ராமேசுவரம் மீனவர்கள் 11 பேரும் இலங்கை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு அங்குள்ள சிறையில் அடைக்கப் பட்டனர். அவர்களுக்கான நீதிமன்ற காவல் முடிவடைந்ததையடுத்து 11 மீனவர்களையும் விடுவித்தனர்.