tamilnadu

img

மதராசில் விவேகானந்தர் - இராமச்சந்திர வைத்தியநாத்

காந்தியடிகளைப் போன்றே மதராஸுடன் நெருக்கமான தொடர்பு கொண்டிருந்ததோடன்றி, பட்டணத்தை தனது தளமாகவும் கொண்டிருந்தவர் விவேகானந்தர். இன்னும் சொல்லப் போனால் வேதாந்த மூளையுடனும், இஸ்லாம் என்ற உடலுடனும் கூடிய, புகழ்மிக்க வெல்லுதற்கரிய தூய்மையான எதிர்கால இந்தியாவென பெருமைகொண்ட விவேகானந்தரை உலகுக்கு அறிமுகப்படுத்தியதே மதராஸ் மாகாணத்தவர்தான்.

விவேகானந்தர் பேரும் புகழும் பெற்ற பின்னர், அவருக்கு தாங்கள்தான் உதவி செய்ததாக சென்னையில் பலரும் பிரச்சாரம் செய்து வந்தனர். அறுபது களில் மதராஸுக்கு வந்து மயிலையில் சமஸ்கிருதக் கல்லூரியில் நாள்தோறும்  மாலையில் சொற்பொழிவாற்றி வந்த காஞ்சி சந்திரசேகர சரஸ்வதி கள்கூட, “விவேகானந்தர் அமெரிக்காவுக்குப் போகிறபோது பயணச் செல வுக்குக்கூடப் பணம் இல்லை, அப்போது கிருஷ்ணசுவாமி அய்யர்தான் தன்  கையில் இருந்த பணத்தையும் அவருக்கு கொடுத்து அமெரிக்காவுக்கு அனுப்பி  வைத்தார்” என்று குறிப்பிட்டுள்ளார். ஆயின் மற்றொரு சந்திரசேகரன் இதைப்  பற்றிக் குறிப்பிடவே இல்லை. ஆம் கிருஷ்ணசுவாமி அய்யரின் மகன் கி.சந்திர சேகரன் அவர்களால் எழுதப்பட்ட கிருஷ்ணசுவாமி அய்யரின் வாழ்க்கை வர லாற்றில் இது பற்றிய குறிப்பேதும் இல்லை. ஆயின் விவேகானந்தர் ஸ்ரீ அழ கியசிங்கப் பெருமாளுக்கு அமெரிக்காவிலிருந்து எழுதிய கடிதங்களை சுட்டிக்  காட்டிய கிருஷ்ணசுவாமி அய்யர், இக்கடிதங்களை ஜனங்கள் எல்லோரும் வாசித்து அனுபவிக்க வழி செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.  இத்தகைய மகா பொய்கள் மதராஸில் திட்டமிட்டு விவேகானந்தருக்கு எதி ராக சனாதனிகளால் பரப்பப்பட்டு வந்திருக்கிறது. இருப்பினும் இப்பட்டணத்து டன் நெருக்கமானவராக, வைதீக மதத்திற்கு எதிரான தனது எதிர்ப்பை கடு மையாக வெளிப்படுத்தி வந்திருக்கிறார்.  “1893 ஆம் வருஷத்தில் விவேகானந்தர் யாரோ  ஒரு சாதாரண ஸந்நியாஸியாக வந்து தென்னிந்தி யாவில் ஸஞ்சரித்துக் கொண்டிருந்த காலத்தில்,  அவருடைய மஹிமையைக் கண்டுபிடித்து நாட்  டிற்கெல்லாம் பெருமை தேடிவைத்தவர் ஸ்ரீஅழ கிய சிங்கப் பெருமாளே. இவருடைய முயற்சிகளி னாலேயே ஸ்வாமி அமெரிக்காவுக்குப் போய்  ஆரிய தர்மத்தை அந்நாட்டில் பிரகாசப்படுத்தும் படி ஏற்பட்டது” என்று ஸ்ரீஅழகிய சிங்கப் பெரு மாள் மறைவையொட்டி கவியரசர் ஸுப்ரமண்ய பாரதியார் இந்தியா பத்திரிகையில் 15.05.1909 அன்று  எழுதிய தலையங்கத்தில் குறிப்பிட்டிருந்தார்.  

மதராஸில் ஸ்ரீஅழகிய சிங்கப் பெருமாளும், டாக்டர் நஞ்சுண்ட ராவும், வேறு பலரும் விவேகா னந்தரின் பதாகையை உயர்த்திப் பிடித்தவர்கள் என்பதோடு நின்றுவிட முடியாது. பாரதி தலை யங்கத்தில் எழுதியதைப் போன்று விவேகானந்தர் அமெரிக்காவிற்கும், ஐரோப்பாவிற்கும் சென்று  சமயச் சொற்பொழிவுகளை செய்திட சகலவிதத்தி லும் உதவியவர்கள் என்பதோடு, சமயப் பணிகளுக்  காக ஆங்கிலம், தமிழ், சமஸ்கிருதம் என வெவ் வேறு மொழிகளில் பல்வேறு பத்திரிகைகளை நடத்தியவர்களும் கூட.  ஏற்கனவே மதராஸுக்கு வந்திருப்பினும், உலகப் பிரசித்தி பெற்ற சிகாகோ சொற்பொழி வுக்குப் பின்னர் இலங்கை வழியாக இந்தியாவில்  நுழைந்து ராமேஸ்வரம், ராமநாதபுரம், பரமக்குடி,  மதுரை, மானாமதுரை, கும்பகோணம் என பல்வே றிடங்களுக்குச் சென்று சொற்பொழிவாற்றி மத ராஸுக்கு வந்த விவேகானந்தருக்கு சிறப்பான முறையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்நிகழ்  வுக்குப் பின்னரே மதராஸுடனான அவரது  நெருக்கம் மேலும் வலுப்பெற்றதை அறியமுடி கிறது. பச்சையப்பன் பள்ளி, விக்டோரியா அரங்கம், விவேகானந்தர் இல்லமாக மாற்றம டைந்த ஐஸ் ஹவுஸ், பாட்டர்ஸ் கார்டன் போன்று  நகரின் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் மட்டு மின்றி, அன்னதான சமாஜத்திலும் அவர் உரை நிகழ்த்தியுள்ளார். 

பிரிட்டிஷ் காலனியாட்சிக்கு எதிரான விடு தலை இயக்கம் துளிர் கொண்ட நிலையில், ஸ்வாமி கள் அனைத்து சொற்பொழிவுகளிலும் மட்டு மின்றி, சினேகித வட்டாரமாய் அமைந்த சீடர் களான ஸ்ரீஅழகிய சிங்கப் பெருமாளுக்கும் டாக்டர் நஞ்சுண்ட ராவுக்கும் எழுதிய கடிதங்களி லும், மத நல்லிணக்கத்தை மனித நேயத்தை தாழ்த்தப்பட்டவர்களுக்கு உரிய இடத்தை வற்புறுத்துவது முக்கியத்துவம் வாய்ந்தது.  “எனது விஷயங்கள் சர்வதேச மயமானவை.  அவை இந்தியாவிற்குள் மட்டும் அடங்குபவை அல்ல என்பதை மறக்கலாகாது” என்று எழுது பவர் ஒரு புத்தகத்தைப் பற்றி குறிப்பிடுகையில் மொழி பற்றிய அவரது ஆழ்ந்த பார்வையை  அறிய முடிகிறது. “நூற்றெட்டு உபநிடதங்களையும் கொண்ட ஒரு தமிழ் நூல் மைசூரில் வெளியிடப் பட்டுள்ளது. பேராசிரியர் தாசனின் நூல் நிலை யத்தில் அதைப் பார்த்தேன். அந்தப் புத்தகம்  சமஸ்கிருதத்தில் அச்சாகியுள்ளதா? அப்படி யிருந்தால் எனக்கு ஒரு பிரதி அனுப்பு. அதனுடன்  ஒரு தாளில் தமிழ் எழுத்துக்களையும் கூட்டெழுத்  துக்களையும் எழுதி அவற்றிற்கேற்ப சமஸ்கிருத எழுத்துக்களை எதிரெதிரே எழுதி அனுப்பு. அதன்  மூலம் நான் தமிழ் எழுத்துக்களைக் கற்றுக் கொள்  வேன்” என்று அழகிய சிங்கருக்கு எழுதுகிறார்.  விவேகாந்தரின் புகழை பரப்பிய மதராஸ் சீடர்  கள் யாவருமே பிரம்மஞான சபையில் தீவிர பங்  காற்றியவர்கள். அன்னி பெசண்டின் தேசிய அர சியலுக்கு வலு சேர்த்தவர்கள். ஆயின் விவே கானந்தரோ பிரம்மஞான சபை பற்றி எதிர்மறை யான கருத்துக்களை கொண்டிருந்தார். மதராஸ் சொற்பொழிவில் பிரம்மஞான சபை, தன் சிகாகோ  சொற்பொழிவு குறித்து பொய்ப் பிரச்சாரம் செய்வ தாக கூறிய போதும், சிகாகோவிலிருந்து ஐரோப்பா  சென்ற போது அன்னி பெசண்டும் ஆல்காட்டும் விடுத்த அழைப்பிற்கிணங்க இங்கிலாந்தில் உள்ள  அதன் தலைமையகத்தில் உரை நிகழ்த்தி அவர்  களின் அழைப்பை கௌரவித்தது ஆச்சரியமா னது. அத்தருணத்தில் அழகியசிங்கருக்கு எழுதிய  கடிதமொன்றில் “மேலை நாட்டினரைப் பற்றி பேசு கிறீர்களா? அவர்கள் எனக்கு உணவும் தங்க இட மும் தந்தனர். நட்புடன் பழகினர். பாதுகாப்பளித்த னர். மிகப் பழைமைவாதிகளான கிறிஸ்துவர்கள் கூட இதற்கு விதி விலக்காக இருக்கவில்லை. ஆனால் இந்த நாட்டுப் பிரசாரகர் ஒருவர் இந்தியா விற்கு வந்தால் நமது நாட்டினர் என்ன செய்கின்ற னர்?” என்று அவர் எழுப்பிய கேள்வி இன்றைக்கும் பொருத்தமானதாகவே இருந்து வருகிறது. 

“இங்கு எனது செலவு பயங்கரமாக உள்ளது.  170 பவுண்ட் நோட்டுகளும் 9 பவுண்ட் சில்லறையும்  நீ தந்தாய். அது 130 ஆகக் குறுகிவிட்டது. சராசரி யாக நாளொன்றுக்கு ஒரு பவுண்ட் செலவாகிறது. சிகரெட் ஒன்று நமது கணக்குப்படி எட்டணா” என்று குறிப்பிட்டவர் பிறிதொரு கடிதத்தில் “எனக்கு எந்த உதவியும் தேவையில்லை. நிதி  திரட்ட முயற்சி செய்யுங்கள். ஓவ்வொரு நாளும்  மாலையில் ஏழைகளையும், தாழ்த்தப்பட்டவர் களையும் சேர்த்து முதலில் மதத்தைப் போதனை செய்யுங்கள். பின்னர் படவிளக்குக் கருவி போன்றவற்றின் மூலம் வான இயல், புவியியல்  முதலியவற்றை அவர்கள் பேசுகிற மொழி யிலேயே கற்றுக் கொடுங்கள் என்று கூறுகையில்  அவரது நுட்பமான பார்வையை உணர்கிறோம். மதராஸில் நிகழ்த்திய பல்வேறு சொற்பொழிவு களில் ஜாதியத்தை, விதவைகளின் நிலைமை யை, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு கல்வி மறுக்கப்படு வதை, தீண்டாமையை தீவிரமாக சாடியுள்ளார். ஒரு கட்டத்தில் “விதவையின் கண்ணீரைத் துடைக்கவும், அனாதையின் வாய்க்கு ஒரு பிடி  சோறு கொண்டு வந்து கொடுக்கவும் முடியாத ஒரு  மதத்திலோ தெய்வத்திடமோ எனக்கு நம் பிக்கை இல்லை” என்று அவர் சொல்வது வெற்றுச்  சவடால் அல்ல என்பதை மதராஸில் விவே கானந்தர் இயக்கத்தின் பிந்திய செயல்பாடுகள் உணர்த்துகிறது.  “புரோகிதர்கள் என்னதான் உளறினாலும், ஜாதி என்பது இறுகிப் போன ஒரு சமுதாய அமைப்பே. அது தனது பணியைச் செய்து முடித்த  பிறகு இப்போது இந்தியாவின் சுற்றுச் சூழ லெங்கும் தனது துர் நாற்றத்தை நிரப்பிக் கொண்டி ருக்கிறது” என்று அவர் அன்றுரைத்தது நீடிக்கத்  தான் செய்கிறது. 

1897 பிப்ரவரி 14 மாலை மதராஸ் ஹார்ம்ஸ்டன்  சர்க்கஸ் வளாகத்தில் இந்தியாவின் எதிர்காலம்  என்ற தலைப்பில் விவேகாநந்தர் உரையாற்றி யுள்ளார். “இந்தியாவின் பிரச்னைகள் மற்ற எந்த  நாட்டுப் பிரச்னைகளைவிட மிகவும் சிக்கலான தும் முக்கியமானதும் ஆகும். இனம், மதம், மொழி,  அரசாங்கம் இவை எல்லாம் சேர்ந்து ஒரு நாட்டை  உருவாக்குகின்றன. உலகத்தின் ஒவ்வொர்  இனத்தையும் இந்த நாட்டுடன் ஒப்பிட்டுப் பாருங்  கள். அந்த நாடுகளை உருவாக்கிய அடிப்படைகள் இந்த நாட்டை உருவாக்கியவற்றைவிட மிகவும் குறைவாகவே இருக்கும். ஆரியர், திராவிடர், தார்த்தர், துருக்கியர், மொகலாயர், ஐரோப்பியர் என்று உலகத்தில் உள்ள எல்லா இனங்களின் ரத்தமும் இங்கே இந்தப் பூமியில் கலந்திருப்பது போல் தோன்றுகிறது. மொழிகளில் கூட இங்கே அற்புதமான கலப்பு உள்ளது” என்று பெருமிதம் கொண்ட விவேகானந்தரின் கரங்களிலுள்ள ஸந்நியாஸிகளுக்கே உரிய தண்டத்தை அகற்றி, சூலாயுதத்தை திணிக்கும் முயற்சி இதே மதரா ஸில் மட்டுமின்றி இந்தியாவெங்கிலும் தீவிரம் கொண்டு வருகிறது.  இம்முயற்சிகளுக்கு எதிராக மத நல்லிணக் கத்தை வலுப்பெறச் செய்வதுதான் நமது கடமை யாக இருக்க முடியும். சமூகக் கொடுமைகளுக்கு எதிராக சாதி பேதமற்ற செயல்பாடுகளை கொண்டி ருக்கும் வகையில் மதராஸுக்கு பெருமை சேர்த்த  விவேகானந்தரின் இயக்கத்தை வலுப்படுத்து வதற்கு இதையன்றி மார்க்கம் வேறேதுமில்லை.

ஜனவரி 12 - விவேகானந்தர் பிறந்த தினம்