சென்னை, ஏப்.24- ஒன்றிய, மாநில அரசுகள் வகுக்கின்ற திட்டங்கள் அனைத்தும் திறம்பட தேவைக் கேற்ப ஒருங்கிணைத்து கடைக்கோடி மக்களிடம் கொண்டுபோய் சேர்ப்பது அது உள்ளாட்சி அமைப்புகளால்தான் முடியும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். தேசிய ஊராட்சிகள் தினத்தையொட்டி காஞ்சிபுரம் மாவட்டம் செங்காடு கிராமத் தில், சிறப்பு கிராம சபைக் கூட்டம் ஞாயிற்றுக் கிழமை(ஏப்.24) நடைபெற்றது. இந்த கிராம சபைக் கூட்டத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டார். கூட்டத்தில் கலந்துகொண்ட பெண்களிடம் முதல்வர் கலந்துரையாடி, அவர்களது கருத்துகளைக் கேட்டறிந்தார். பின்னர் முதல்வர் ஸ்டாலின் பேசுகையில், “தமிழக உள்ளாட்சி அமைப்புகள் பாரம் பரியமான, பழம்பெரும் வரலாறு கொண்டவை. ஊராட்சி அமைப்புகளை வலுப் படுத்தவும், வலிமைப்படுத்தவும், அதிகாரப் பரவலை உறுதிப்படுத்தவும் அரசியல மைப்புச் சட்டத்தின் 73-வது திருத்தம் ஊராட்சி அமைப்புகளுக்கு அங்கீகாரம் வழங்கி யுள்ளது.
இந்தச் சட்டம் முதன்முதலாக நடை முறைக்கு வந்த ஏப்.24 தேசிய ஊராட்சி தினமாக கொண்டாடப்படுகிறது”என்றார். மாநில மற்றும் ஒன்றிய அளவில் பல்வேறு திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளது. இந்த திட்டங்களை எல்லாம் திறம்பட தேவை கேற்ப ஒருங்கிணைத்து கடைக்கோடி மக்களி டம் கொண்டுபோய் சேர்ப்பது அது உள் ளாட்சி அமைப்புகளால்தான் முடியும். ஏறக் குறைய 10 வருட காலமாக ஒரு ஆட்சி (அதிமுக) இருந்தது. அந்த ஆட்சியில் முறை யாக உள்ளாட்சி அமைப்பு தேர்தலை கூட நடத்தமுடியாத நிலை இருந்தது என்றும் முதல மைச்சர் குற்றம் சாட்டினார் அனைத்து ஊராட்சிகளுமே எதிர்க்கட் சியைச் சார்ந்தவர்களாக இருந்தாலும், அந்த ஊராட்சிகளுக்கு என்னென்ன உதவிகள் வேண்டுமோ, என்னென்ன தேவைகள் அவசி யமோ, செய்து கொடுக்கப்படும். குடிநீர் பிரச் சினை, ரேசன் கடை பிரச்சினை, மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு வரக்கூடிய இடை யூறுகள், நூறுநாள் வேலை திட்டத்தை 150 நாட்களாக மாற்றித் தரவேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்துள்ளீர்கள், விரைவில் இவைகளை சரி செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் முதல்வர் ஸ்டாலின் கூறினார்.