எலும்பை உறைய வைக்கும் கடும் குளிரில் அதிகாலை வேளையில் கிராமங்களிலும், நக ரங்களின் தெருக்களிலும் வீடு, வீடாகச் சென்று மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சிக்கு மக்களிடம் நிதி திரட்டும் இயக்கம் விருதுநகர் மாவட்டம் முழுவதும் வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது. கடந்த 2021 டிசம்பர் 26 முதல் ஜனவரி 2ம் தேதிக்குள் 942 குழுக்கள் மூலம் ரூ.15 லட்சத்து 13 ஆயிரத்து 394 நிதி திரட்டப்பட்டுள்ளது. கார்ப்பரேட் நிறுவனங்களுடன் கள்ளக் கூட்டு வைத்து தேர்தல் பத்தி ரங்கள் மூலம் நிதி திரட்டும் பாஜக போன்ற கட்சிகள் உள்ள நாட்டில், மக்களிடம் நேரடியாகச் சென்று கோரிக்கைகளை கேட்டறிந்து அவர்களுக்கான போராட்டங்களை முன்னெடுத்திட மக்களிடம் நிதி திரட்டும் மகத்தான பணியை மார்க்சிஸ்ட் கட்சி செய்து வருகிறது. கொரோனா எனும் கொடிய வைரசின் கோரத் தாண்டவம் முடி வடையாமல் தொடர்ந்திடும் நிலை யில், ஒமைக்ரான் என வைரசாக உரு மாறி மேலும் அச்சுறுத்தத் தொடங்கி உள்ள சூழலில், மக்களுக்கு நம்பி க்கையை, தைரியத்தை ஊட்டும் விதத்தில் உரையாடுகிறோம்.
கடந்த இரு ஆண்டுகளில் கொரோனா பேரிடரால் வேலை இழந் தவர்கள், வருமானம் இழந்தவர் களை பெரும்பாலான வீடுகளில் காண முடிகிறது. நோயினால் பாதிக்கப்பட்டவர்கள், நோய் தாக்கி உயிரிழந்த குடும்பங்களையும் சந்தித்த அனுபவம் ஏற்பட்டது. எத்தனை சிரமங்கள் இருந்தா லும் இது நம்ம கட்சி, நமக்காக போரா டுகிற கட்சி எனும் உணர்வோடு மனமு வந்து நிதியளிக்கின்றனர். “அம்மாவிடம் காசில்ல... அப்பா வந்தவுடன் உனக்கு வாங்கித் தாரேன். நீ சேத்து வைச்சிருக்கிறதுல கொடு” என தனது ஏழு வயது மகனி டம் கைமாத்து வாங்கித் தரும் தாய்மார்கள்.. “முதியோர் பென்சன் தான் வாங்குகிறேன். என் மகன் சாப்பாடு கொடுக்கிறான். ஆனாலும் உங்க ளுக்கு காசு கொடுக்குறேன்” எனச் சொல்லி தன் முந்தானையில் முடிந்து வைத்துள்ள பத்து ரூபாயை எடுத்துத் தரும் மூதாட்டி..
“அம்மாவும், அப்பாவும் வேலை க்கு போயிட்டாங்க.. எனக்கு கொடு த்த காசு இது” எனத் தயங்காது எடுத்து தரும் குழந்தைகள்... களை எடுத்ததில், கண்மாய் வேலை செய்ததில், மூட்டை தூக்கி யதில், மூச்சடைக்க உழைத்ததில் கிடைத்த கூலியில் இருந்து முக மலர்ச்சியுடன் மக்கள் நிதி வழங்கு கின்றனர். விருதுநகர் மாவட்டத்தின் முக்கியத் தொழிலான பட்டாசு ஆலை, தீபாவளி முடிந்து ஒன்றரை மாதம் திறக்காத நிலையில், பட்டா சுக்கு சுற்றுச்சூழல் விதியிலிருந்து விலக்களிக்க வேண்டும். ஆலை களைத் திறக்க வேண்டுமென வலி யுறுத்தி ஆயிரக்கணக்கான பட்டாசுத் தொழிலாளர்களைத் திரட்டி போரா ட்டங்கள் நடத்திய பின்னணியில் தற்போது ஆலைகள் திறக்கப்பட்டு வேலைகள் தொடங்கியுள்ளன.
கைத்தறி நெசவாளர்களுக்கு நூல் வழங்காமல் வேலை இழந்து தவித்த போது, பெரும் திரளாக நெச வாளர்களைத் திரட்டி போராட்டங் கள் நடத்தியதன் மூலம் நூலும் கிடைத்தது. வேலையும் கிடைத்தது. சாலை வசதிக்காக, தெரு விளக்கு எரிவதற்காக, பேருந்து சேவைக்காக, ரேசன் கடை களில் முறையாக பொருட்கள் கிடைப் பதற்காக, அரசு மருத்துவமனை களில் மருந்துகள், மருத்துவர்கள் வேண்டுமென்பதற்காக, குடிமனைப் பட்டாவுக்காக, குடியிருக்க வீட்டிற்காக என எண்ணற்ற போராட்டங்களை நடத்தியவர்கள் மார்க்சிஸ்ட் கட்சித் தோழர்கள். கொரோனா பேரிடர் காலத்தில் மருத்துவ உதவியும், உணவுப் பொருட்கள் உதவியும் வழங்கி மக்க ளுக்கு நேசக்கரம் நீட்டியவர்கள் என்ற உரிமையோடு மக்களிடம் செல்கிறோம். மக்களின் வாழ்க்கைப் பிரச்சனைகளை மேலும் உணர்வுப் பூர்வமாக உள் வாங்கிட இந்த மாபெரும் மக்களிடம் நிதி திரட்டும் இயக்கம் உதவுகிறது. மக்களுக்காக எந்நாளும் பணியாற்றிட உந்து சக்தியாகத் திகழ்கிறது. விருதுநகர் மாவட்டம் முழுவ தும் ஒரு லட்சம் குடும்பங்களை இது வரையில் சந்தித்துள்ளோம். வரப் போகும் தைத்திருநாள் வரையில் மேலும் ஒரு லட்சம் குடும்பங்களைச் சந்திக்க உள்ளோம். மக்களிடம் செல்வோம் .. மனித மனங்களை வெல்வோம்!