மே 30 வரை மழை
கோவை, நீலகிரிக்கு ஆரஞ்ச் எச்சரிக்கை
சென்னை, மே 27 - வங்கக் கடலில் உருவாகி யுள்ள காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி காரணமாக மே 30- ஆம் தேதி வரை தமிழ்நாட் டின் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கன மழை பெய்யக் கூடும் என ஆரஞ்சு எச்ச ரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, மே 28 அன்று நீலகிரி மற்றும் கோவை மாவட்ட மலைப்பகுதிகளில் மிக கன மழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடப் பட்டுள்ளது. திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென் காசி, நெல்லை மாவட்டப் பகுதிகள் மற்றும் கன்னியா குமரி ஆகிய மாவட்டங் களில் மிக கன மழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது. மே 29 அன்று நீலகிரி, கோவை மாவட்ட மலைப் பகுதிகள், தேனி, தென்காசி, திருநெல்வேலி மாவட்ட மலைப்பகுதிகளுக்கு ஆரஞ்சு எச்சரிக்கையும், திருப்பூர், திண்டுக்கல், கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கையும் விடப் பட்டுள்ளது. மே 30 அன்று நீலகிரி, கோவை மாவட்ட மலைப் பகுதிகள், தேனி, தென்காசி, திருநெல்வேலி மாவட்ட மலைப்பகுதிகளுக்கு ஆரஞ்சு, திருப்பூர், திண்டுக் கல், கன்னியாகுமரிக்கான கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப் பட்டுள்ளது.