tamilnadu

img

தமிழகத்தில் டிச.1 வரை மழை

சென்னை, நவ. 27- அடுத்த 2 நாட்களுக்கு தமிழ்நாட்டின் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மித மான மழை பெய்யக்கூடும் என சென்னை  வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள் ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கை யில், கிழக்கு திசை காற்றின் வேக மாறு பாடு காரணமாக வரும் டிசம்பர் 1ஆம் தேதி வரை தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 12 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். ஒருசில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். ஒருசில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மீனவர்களுக் கான எச்சரிக்கை ஏதுமில்லை எனவும் கூறப் பட்டுள்ளது. 

;