ஹைதராபாத், ஏப். 10 - தெலுங்கானாவில் ரூ. 11 ஆயிரத்து 300 கோடி மதிப்பிலான உட்கட்ட மைப்பு மற்றும் இணைப்பு உள்ளிட்ட வளர்ச்சித்திட்ட பணிகளுக்கான தொடக்க விழா மற்றும் அடிக்கல் நாட்டும் விழாவில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி சனிக்கிழமையன்று ஹைதராபாத் நகரில் உள்ள பேகம்பட் விமான நிலையத்திற்கு சிறப்பு விமானத்தில் சென்று இறங்கினார். அப்போது அவரை ஆளுநர் தமிழி சை சவுந்தரராஜன் மட்டுமே பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். தெலுங்கானா முதல்வரும், பாரத் ராஷ்டிர சமிதி கட்சித் தலைவரு மான கே. சந்திரசேகர ராவ், வழக்கம்போல பிரதமரை வரவேற்கச் செல்லவில்லை. கடந்த ஓராண்டு காலத்தில் மட்டும், தொடர்ந்து 5-ஆவது முறையாக பிரதமர் மோடி யின் வரவேற்பை, முதல்வர் கே. சந்திரசேகர ராவ் புறக்கணித்தார். இதனால், ஆத்திரம் அடைந்த பிரதமர் மோடி, “குடும்ப அரசியலை ஊக்குவிக்கும் சிலர், மக்களுக்கான திட்டங்களில் தங்களுக்கு என்ன ஆதா யம் கிடைக்கும் என்று பார்க்கின்ற னர். குடும்ப அரசியலும், ஊழலும் வேறல்ல. குடும்ப அரசியல் இருக்கும் இடத்தில், ஊழலும் பெருகத் தொடங்கும்” என்று தெலுங்கானா முதல்வர் கே. சந்திரசேகர் ராவை யும், பாரத் ராஷ்டிர சமிதி கட்சியை யும் மறைமுகமாகச் சாடினார்.
இதற்கு முதல்வர் கே. சந்திர சேகர ராவின் மகனும், அம்மாநில அமைச்சர்களில் ஒருவருமான கே.டி. ராமா ராவ் டுவிட்டரில் பதிலடி கொடுததுள்ளார். “இந்தியாவில் அதிகபட்ச தனிநபர் வருமான வளர்ச்சியைக் கொண்ட மாநிலம். அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் வழங்கும் முதல் மாநிலம். உலகின் மிகப்பெரிய லிப்ட் பாசன திட்டத்தை நிறைவேற்றிய மாநி லம். இந்தியாவின் சிறந்த ஊரக வளர்ச்சி மாதிரி - 100 சதவிதம் ODF பிளஸ் கிராமங்கள் கொண்ட மாநி லம். இந்தியாவின் 2-வது அதிக நெல் உற்பத்தியாளர் மற்றும் அதிக எண்ணிக்கையில் தகவல் தொழில்நுட்ப வேலைகளை உருவாக்கும் மாநிலம். பல சர்வதேச விருதுகளை வென்ற மாநிலம். ஆனாலும் இன்னும் தெலுங்கானா மாநிலத்தை இந்தியப் பிரதமர் ஒரு வார்த்தை கூட பாராட்டவில்லை. தனது அற்ப அரசியலுக்காக, சிறப்பாக செயல்படும் அரசை ஒப்புக் கொள்ள மறுக்கிறார்” என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், “கடந்த 9 ஆண்டுகளில் தெலுங்கானாவை விட சிறப்பாக செயல்பட்ட ஒரு மாநிலத்தின் பெயரை சொல்லுமாறு நரேந்திர மோடிஜி-க்கு தான் சவால் விடுக்கிறேன்?” என்றும் கூறியுள்ளார்.