சென்னை, செப்.8- கவிஞர் ரவீந்திரநாத் தாகூர் சிலையைத் தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார். சென்னை காமராஜர் சாலையில் அமைந்துள்ள ராணி மேரி கல்லூரி வளாகத்தில் செய்தி - மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் கவி ஞர் ரவீந்திரநாத் தாகூர் முழு உருவச் சிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிலையை முதல்வர் மு.க. ஸ்டாலின் வெள்ளியன்று (செப்.8) திறந்து வைத்தார். இதையடுத்து அங்கு அலங்கரித்து வைக்கப்பட்டி ருந்த ரவீந்திரநாத் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் கள் கே.என். நேரு, க.பொன்முடி, மா.சுப்பிரமணியன், பி.கே. சேகர் பாபு, மு.பெ.சாமிநாதன் மேயர் பிரியா ராஜன், நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், சென்னை மாநகராட்சி துணை மேயர் மகேஷ் குமார் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.