காயிதே மில்லத் நகர், ஸ்டாலின் நகர் குடியிருப்புகளை அகற்றக் கூடாது!
அமைச்சர் கே.என். நேருவிடம் பெ. சண்முகம் வலியுறுத்தல்
சென்னை, மே 26 - தாம்பரம் அருகே கல்லாங்குத்து புறம்போக்கு நிலத்தில் உள்ள காயிதே மில்லத் நகர், ஸ்டாலின் நகர் குடியிருப்புகளை அகற்றக் கூடாது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியது. இதுதொடர்பாக நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என். நேருவிடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் தலைமையில் தென்சென்னை மாவட்டச் செயலாளர் ஆர். வேல்முருகன், பல்லாவரம் பகுதிச் செயலாளர் எம். தாமோதரன், நிர்வா கிகள் ஜி. ராஜேந்திரன், ஹேம குமார் ஆகியோர் திங்களன்று (மே 26) நேரில் மனு அளித்து முறையிட்டனர்.
17 ஆண்டுகளாக ஏமாற்றப்பட்ட மக்கள்
“தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட அனகாபுத்தூர் காயிதேமில்லத் நகர், ஸ்டாலின் நகரில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக மக்கள் வசித்து வருகின்றனர். இந்தப்பகுதி 1911ஆம் ஆண்டு முதல் அரசின் ‘ஏ’ பதிவேட்டில் கல்லாங்குத்து புறம்போக்கு என்று வகைப்படுத்தப் பட்டு உள்ளது. இக்குடியிருப்புகள் அடையாறு ஆற்றின் கரையில் இருந்து சுமார் 150 மீட்டர் தூரத்தில் அமைந்துள்ளன. ஆற்றின் நீரோட்டத்திற்கும், குடி யிருப்பு பகுதிகளுக்கும் எவ்வித சம்ப ந்தமும் இல்லை. மழைக் காலத்திலும் கூட வெள்ளநீர் சூழ்வதில்லை. இந்தப் பகுதிகளுக்கு 2008-இல் பட்டா வழங்க மாவட்ட ஆட்சியரால் ரசீது கொடுக்கப்பட்டது. ஆனால், 17 ஆண்டுகளை கடந்தும் பட்டா வழங்கா மல், தற்போது நீர்ப்பிடிப்பு என்று குடியிருப்புகளை அகற்றி வருகின்ற னர். 2023-ஆம் ஆண்டு நீர்வளத்துறை அளவீடு செய்துள்ள எல்லையை யும் மீறி குடியிருப்புகள் இடிக்கப்படு கின்றன.
தனியார் நிறுவனத்திற்கு பட்டா வழங்கியது எப்படி?
அடையாறு ஆற்றின் கரையில் அமைந்துள்ள காசா கிராண்ட் தனியார் கட்டுமான நிறுவனத்திற்கு பட்டா வழங்கி விட்டு, ஆற்றின் கரையி லிருந்து 150 மீட்டர் தொலைவில் உள்ள குடியிருப்புக்கு பட்டா வழங்க மறுப்பது சரியல்ல. எனவே, குடியிருப்புகளை இடிக்கும் பணியை நிறுத்த வேண்டும். கல்லாங்குத்து புறம்போக்கில் உள்ள குடியிருப்புகளுக்கு பட்டா வழங்க வேண்டும்” என்று அமைச்சரிடம் வலியுறுத்தினர். மேலும், “அடையாறு கரையோரம் உள்ள மல்லிகைப்பூ நகர், சூர்யா நகர், ஜோதியம்மாள் நகர், திடீர் நகர், ஜோதி ராமலிங்கம் நகர் ஆகிய பகுதி களில் அகற்றப்படும் குடியிருப்பு வாசிகளுக்கு அதே பகுதியில் அடுக்கு மாடி குடியிருப்பு கட்டித் தர வேண்டும்” என்றும் வலியுறுத்தினர். இதற்கு பதிலளித்த அமைச்சர், தலைமைச் செயலகத்தில் துறையின் செயலாளரை சந்தித்தும் பிரச்சனை களைத் தெரிவிக்குமாறு அறிவுறுத்தி னார்.
அரசுத்துறை செயலரிடமும் தலைவர்கள் முறையீடு
இதையடுத்து நகராட்சி நிர்வாகத் துறை செயலாளர் டி. கார்த்திகேயனை சந்தித்து பெ. சண்முகம், ஆர். வேல்முருகன் உள்ளிட்ட தலைவர்கள் மனு அளித்துப் பேசினர். இதையடுத்து தலைவர்கள் முன்பே அதிகாரிகளை தொடர்பு கொண்ட செயலாளர், ஏற்கெனவே அளவீடு செய்யப்பட்ட பகுதிகளைத் தாண்டி குடியிருப்புகளை இடிக்க வேண்டாம் என்று உத்தரவிட்டார். இருப்பினும், செயலாளரின் உத்தரவையும் மீறி அதிகாரிகள் காவல்துறை பாதுகாப்புடன் மக்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றி விட்டு குடியிருப்புகளை இடித்து வரு கின்றனர்.