ரூ.13,600 கோடிக்கான புதுச்சேரி பட்ஜெட் தாக்கல்
புதுச்சேரி, மார்ச் 12 - புதுச்சேரியின் 2025-26 ஆம் ஆண்டிற் கான பட்ஜெட்டை முதல்வர் ரங்கசாமி புதன் கிழமை தாக்கல் செய்தார். ரூ.13,600 கோடிக் கான இந்த பட்ஜெட்டை வரியில்லா பட்ஜெட் என்று கூறினார். மேலும் முதலமைச்சர் கூறுகையில், “புதுச்சேரி மாநிலத்தின் சொந்த வருவாய் ரூ.7,641.40 கோடி என்றும் மாநில பேரிடர் நிவா ரண நிதியையும் சேர்த்து ஒன்றிய அரசின் நிதியுதவி ரூ.3432.18 கோடி என்றும் மதிப்பிடப் பட்டுள்ளது. ஒன்றிய சாலை நிதியாக ரூ.25 கோடியில், ஒன்றிய அரசுத் திட்டங்களின்கீழ் வழங்கும் நிதி மற்றும் நிதி பற்றாக்குறையை ஈடுகட்டும் பொருட்டு பேரம் பேசி வாங்கும் கடனையும் சேர்த்து ரூ. 400 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றும் முத லமைச்சர் கூறினார். ரூ.2,101.42 கோடி கடனுக்கு அனுமதி நிதி பற்றாக்குறையை ஈடுகட்டும் வகை யில், பேரம் பேசி வாங்கும் கடனையும் சேர்த்து ரூ.2,101.42 கோடி கடன் பெற ஒன்றிய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இந்த நிதியாண் டின் வரவு செலவுத் திட்ட மதிப்பீடு ரூ.13,600 கோடியில் ரூ.11,624.72 கோடி வருவாய் செல வினங்களுக்காகவும், ரூ.1,975.28 கோடி மூல தன செலவினங்களுக்காகவும் ஒதுக்கீடு செய் யப்பட்டுள்ளது. இந்த வரவு- செலவு திட்டத் தில் சிறப்பு நிதியத்திற்கு ரு.2,760 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது என்றும் தெரி வித்தார். மகளிர் உதவித்தொகை உயர்வு மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை சார்பில் குடும்பத் தலைவிக்கு தலா ரூ.1000 வழங்கி வருகிறது. இந்த தொகை ரு.2500 ஆக உயர்த்தி வழங்கப்படும். இதற்காக ரூ.786.56 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.
மேலும், 21 வயது பூர்த்தி அடைந்த 55 வயது மிகாமல் இருக்கும் அரசின் எவ்வித மான மாதாந்திர உதவித் தொகையும் பெறாத வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் அனைத்து குடும்பத் தலைவிக்கும் ரூ.2500 உயர்த்தி வழங்கப்படும் என்று முதல்வர் அறிவித்தார். தொழிலாளர்களுக்கு நிவாரணம் விவசாயத் தொழிலாளர்களுக்கு மழைக் கால நிவாரணம் ஆண்டொன்றுக்கு ரூ.2 ஆயிரம், அமைப்புசாரா தொழிலாளர் களுக்கு ஆண்டொன்றுக்கு ரூ.2 ஆயிரம் நிவா ரணம் வழங்கப்படும்.
இத்துடன், வயதுக்கு ஏற்றவாறு பெற்று வரும் மாத ஓய்வூதியம் பெறும் முதியவர்கள் ரூ.2 ஆயிரத்தில் இருந்து ரூ.500 கூடுதலாக உயர்த்தி வழங்கப்படும் எனவும் அறிவித்தார். ரூ.1000 உதவித்தொகை புதுச்சேரி மாநிலத்தில் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசு பள்ளியில் பயின்று கல்லூரிகளில் படிக்கும் மாணவர் களுக்கு 3 ஆண்டுகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 ஊக்கத்தொகை வழங்கப்படும் என்றும் அறிவித்தார். தினமும் முட்டை பள்ளி மாணவர்களின் உடல் நலத்தை கருத்தில் கொண்டு ஊட்டச்சத்து மிக்க பல்வேறு சிறுதானிய சிற்றுண்டி மாலை நேரங்களில் வாரத்திற்கு 2 பள்ளி நாட்களில் வழங்கப்பட்டு வருகிறது. இவை அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி களுக்கு, அனைத்து பள்ளி நாட்களிலும் வழங்கப்படும்.
அரசுப் பள்ளி மாண வர்களுக்கு மதிய உணவு திட்டத்தில் வாரம் 3 முட்டைகள் வழங்கப்படுகிறது. இனி வாரத்தில் அனைத்து பள்ளி நாட்களிலும் முட்டை வழங்கப்படும் என அறிவித்தார். பெண்களுக்கு உதவித்தொகை பட்டியலின, பழங்குடியின மக்களுக்கு சிறப்புக்கூறு திட்ட நிதி ரூ.526.82 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 30 வயதை கடந்தும் திருமணம் ஆகாத, கணவனை இழந்த, வேலையற்ற பட்டியலின-பழங்குடி யின பெண்களுக்கு மாதம் ரூ.3 ஆயிரம் இவர்கள் திருமணம் மற்றும் பணிக்கு செல்லும் வரை வழங்கப்படும். பட்டியலின, பழங்குடியின முதியோர், விதவை, முதிர் கன்னி, கணவனால் கைவிடப்பட்ட பெண் களுக்கு தற்போது தரப்படும் ஓய்வூதியத் துடன் ரூ.500 கூடுதலாக வழங்கப்படும். பெற் றோரை இழந்த பட்டியலின, பழங்குடியின குழந்தைகளுக்கு 18 வயது வரை கல்வி, அடிப்படை தேவைகளுக்கு மாதம் ரூ.5 ஆயிரம் வழங்கப்படும். புதுச்சேரியில் ரேசன் கடைகளில் இலவச அரிசியுடன் 2 கிலோ கோதுமை இலவச மாக வழங்கப்படும். ரேசன் அட்டையில் புதிதாக பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி சேர்த்தல் ஆகியவற்றை இணையதளம் மூலம் மக்கள் சரி செய்ய வழிவகை செய்யப்படும் என்றும் முதல்வர் ரங்கசாமி தெரிவித்தார்.