tamilnadu

img

புதுச்சேரி விடுதலை நாள் விழா: வண்ணமிகு கலை நிகழ்ச்சிகள்

புதுச்சேரி,நவ. 1- புதுச்சேரி விடுதலை நாள் விழா மாண வர்களின் வண்ணமிகு கலை நிகழ்ச்சி களுடன்  கொண்டாடப்பட்டது. பிரெஞ்சு ஆதிக்கத்தில் இருந்த புதுச்சேரி யூனியன் பிரதேசம் 1954  ஆம்  ஆண்டு நவம்பர் 1 இல் விடுதலை பெற்று, இந்தியாவுடன் இணைந்தது. ஒவ்வொரு ஆண்டும் விடுதலை  தினத்தை கொண்டாடும் வகையில் நவ 1 ஆம் தேதி புதுச்சேரி அரசு சார்பில் விடு முறை அளிக்கப்பட்டு வருகிறது.  விடுதலை நாளை கொண்டாடும் வகை யில்  புதன்கிழமை (நவ.1) புதுச்சேரி கடற்கரை காந்தி சிலை எதிரே அரசு சார்பில் கொண்டாடப்பட்டது.முதல்வர் ரங்கசாமி தேசியக் கொடியை ஏற்றிவைத்து காவல்துறை யினர் அணிவகுப்பு மரியாதையை பார்வையிட்டார். வங்கிக் கணக்கில் ரூ.1000 பின்னர் முதல்வர் ரங்கசாமி விடுதலை நாள்  உரையாற்றினார். அப்போது,“ தீபாவளி மற்றும் பொங்கல் பண்டிகைக் காலங்களின்போது, 18 வயது பூர்த்தியடைந்த அனைத்து ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின மக்களுக்கு இலவச வேட்டி சேலைக்கு பதிலாக வழங்கப்பட்டு வந்த நிதியுதவி ரூ.500 வரும் தீபா வளி முதல் ரூ.1,000 ஆக உயர்த்தப் பட்டது, இந்த தொகை அவரவர் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும்” என்றார். அதனைத் தொடர்ந்து முன்னாள் ராணுவத்தினர், காவல்துறை யினர்,பள்ளி மாணவர்களின் அணி வகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். பின்னர்  பள்ளி-கல்லூரி மாணவர்களின் வண்ணமிகு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்று விழா முடி வடைந்தது. விழாவில் பேரவைத் தலைவர் செல்வம்,அமைச்சர் சாய் சரவணன் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், தலைமை செயலர் ராஜீவ் வர்மா, மாவட்ட ஆட்சியர் வல்லவன் மற்றும் அதிகாரிகள் உட்பட திரளானோர் கலந்து கொண்டனர். இதே போல் காரைக்காலில்  உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் கொடி ஏற்றினார். மாகே பிராந்தியத்தில் வேளாண் அமைச்சர் தேனீ ஜெயக்குமார், ஏனாமில் பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன் ஆகியோர் தேசியக் கொடியை ஏற்றி வைத்தனர்.