tamilnadu

img

வனப் பாதுகாப்பு திருத்த மசோதாவை 22 மொழிகளிலும் வெளியிடுக! - சு.வெங்கடேசன் எம்.பி

வனப் பாதுகாப்பு திருத்த மசோதாவை 22 மொழிகளிலும் வெளியிட வேண்டுமென மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டிருக்கும் செய்தி குறிப்பில், “வனப் பாதுகாப்பு திருத்த மசோதாவை தமிழ் மொழியில் வெளியிட வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தேன்; இன்று தமிழ் மொழியில் கருத்துகள் தெரிவிக்கலாம் என அறிவிப்பு வெளியிட்டுள்ளது மக்களவை செயலகம்.

வனப் பாதுகாப்பு திருத்த மசோதா 2023-ஐ தமிழ் உள்ளிட்ட அனைத்து  மொழிகளில் வெளியிட வேண்டும் எனவும் மசோதா மீது அனைத்து மொழிகளிலும் கருத்து தெரிவிக்க வாய்ப்பு வழங்க வேண்டும் எனவும் நாடாளுமன்றக் கூட்டுக் குழுத் தலைவர் மற்றும்  அமைச்சருக்குக் கடிதம் எழுதியுள்ளேன்.

மசோதா தமிழில் வெளியிடப்பட்டது மகிழ்ச்சியான செய்தி என்றாலும்கூட அரசியலமைப்புச் சட்டத்தின் 22 மொழிகளிலும் வெளியிடாதது கண்டனத்திற்குரியது. உடனடியாக 22 மொழிகளிலும் மசோதாவை வெளியிட வேண்டுமென கோருகிறேன்.” இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது