tamilnadu

img

ஐம்பெரும் கலை இலக்கிய ஆளுமைகள்

கும்பகோணம், ஜூலை 10 - கும்பகோணத்தில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநிலக் குழு கூட்டம் மாநில தலைவர்கள் ச.தமிழ்ச்செல்வன், மதுக்கூர் ராமலிங்கம் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. முப்பெரும் கவிஞர்களான மகாகவி பாரதியார், புரட்சிக்கவி பாரதி தாசன், மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரத்தோடு கவிஞர் தமிழ்ஒளி, தஞ்சை பால சரஸ்வதி ஆகி யோர்  பெயரையும் இணைத்து ஐம்பெரும் கலை இலக்கிய ஆளுமை கள் என்கின்ற பதாகையை இக்கூட்டத் தில் தலைவர்கள் வெளியிட்டனர்

கவிஞர் தமிழ் ஒளி

கவிஞர் தமிழ் ஒளி  பாரதி,  பாரதிதாசனுடைய மரபில் வந்தவர். மே தின கவிதை உள்ளிட்ட புரட்சிகர மான கவிதைகளும் வீராயி காவியம் உள்ளிட்ட பல்வேறு காவியங்களும் எழுதிய தமிழ் ஒளி தலித் இலக்கி யம் என்கின்ற வகைமை உருவா வதற்கு முன்பாகவே ஒடுக்கப்பட்ட மக்க ளுக்கான ஒரு காவியத்தை படைத்த எழுத்தாளராக இருந்திருக்கிறார் . அதேபோல தஞ்சை பால சரஸ்வதி, தஞ்சை நால்வர் நாட்டிய மரபில் ஒரு ஒடுக்கப்பட்ட சமூகத்தி லிருந்து வந்தவர். நாட்டியம் என்பது ஒன்று தேவரடியார் மரபு அல்லது சாஸ்திரிய மரபு என்று இருந்த கால த்தில் அதை இரண்டையும் மறுத்து பரதநாட்டியம் என்பது தமிழ் மரபி லிருந்து வந்தது என்பதை நிரூபித்தவர். இன்னும் சொல்லப்போனால் சாஸ்திரிய நாட்டிய மரபை புறக் கணித்தவர் பால சரஸ்வதி அவரது பாட்டி புகழ்பெற்ற வீணைக் கலைஞர் வீணை தனம்மாள் ஆவார்.

அமெரிக்காவின் 100 சிறந்த நடன கலைஞர்கள் பட்டியலில் பால  சரஸ்வதி இருக்கிறார். மியூசிக் அகா டமி நிறுவனம் ஒரு நாட்டியக் கலை ஞருக்கு ஒரு விருது கொடுத்து கௌர வித்திருக்கிறது என்றால் அது பால சரஸ்வதி அவர்களுக்கு மட்டுமே. ஒரு நாட்டிய மரபை நாடு கடந்து கொண்டு சென்ற பாலசரஸ்வதி அவர் களையும் தற்போது தமுஎகச  தனது பதாகையில் இணைத்துள்ளது. முப் பெரும் கவிஞர்கள் என்பதிலிருந்து ஐம்பெரும் கலை இலக்கிய ஆளுமை கள் என்று பரிணமிப்பதாக தமுஎகச மாநிலக் குழு முடிவு செய்தது. அந்த ஐம்பெரும் கலை இலக்கிய ஆளுமைகளின் பதாகையை தமு எகச முதுபெரும் தலைவரான சிகரம் செந்தில்நாதன். வெளியிட தமுஎகச வினுடைய முதல் கூட்டத்தில் கலந்து கொண்ட தோழர் நாகை பாலு அவர்கள் அதைப் பெற்றுக் கொண்டார்.