சென்னை, நவ.29- சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பழ.அதிய மான் எழுதிய வைக்கம் போராட்டம் நூலின் கன்னட மொழிபெயர்ப்பு நூல் புத னன்று (நவ.29) வெளியிடப் பட்டது. திராவிட கழகத் தலை வர் கி.வீரமணி முதல் பிர தியை பெற்று கொண்டார். இதனை தொடர்ந்து பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில் மதுரை மாவட்டத்தில் ரூ.3.90 கோடி, திண்டுக்கல் மாவட்டம், தெப்பத்துப்பாட்டியில் ரூ.2.53 கோடியில் 2 கள்ளர் சீரமைப்பு பள்ளிகள் மொத்தம் ரூ.6.52 கோடியில் கட்டப்பட்ட கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள், அறிவியல் ஆய்வகம், கணினி ஆய்வகம், கூடுதல் கழிவறைகள் மற்றும் ஆழ்த்துணை கிணறு என பல்வேறு மாவட்டங்களில் ரூ.15.54 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள கட்டிடங் களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் ராஜகண்ணப் பன், தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். சொகுசு பேருந்து முன்னதாக, தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் கீழ் ரூ.2.92 கோடி 2 புதிய வால்வோ சொகுசு சுற்றுலா பேருந்துகள் பயன்பாட்டினை சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து கொடியசைத்து முதலமைச்சர் தொடங்கி வைத்தார். இந்த பேருந்தின் முதல் பயணமாக மாற்றுத் திறனா ளிகள் நலத் துறையின் சிறப்பு பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் மாமல்லபுரத்திற்கு சுற்றுலா பயணம் சென்றனர்.