மதுரை, ஏப்.19- தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்- கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் கவிஞர் பாண்டிச்செல்வியின் நெருப் புச் சொற்கள் கவிதை நூல் வெளியீட்டு நிகழ்ச்சி திரு மங்கலத்தில் கிளைத் தலைவர் இரா.சசிகுமார் தலைமை யில் நடைபெற்றது. க.மணிகண்டன் வரவேற்றார். புறநகர் மாவட்ட செயலாளர் மீ.லெனின் துவக்கவுரையாற்றினார். திண்டுக்கல் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.பால பாரதி கவிதை நூலை வெளியிட்டு உரையாற்றினார். சிஐடியு மாநில பொருளாளர் மாலதி சிட்டிபாபு நூலை பெற்றுக்கொண்டார் தமுஎகச மாநில துணைப்பொதுச் செயலாளர் அ.இலட்சுமிகாந்தன் கவியுரை வழங்கினார்.அகில இந்திய மக்கள் அறிவியல் கூட்டமைப்பு பொறுப்பா ளர் பேரா. பொ.இராசமாணிக்கம், புறநகர் மாவட்டத்தலை வர் வெண்புறா, மாநகர் மாவட்டத்தலைவர் இளங்கோ வன் கார்மேகம். தொழிலதிபர் இரா.ஜெயராமன், சொற் கூடு பதிப்பகம் கவிஞர் பா.மகாலெட்சுமி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். .கா.காமேஷ் நன்றி கூறினார். நூலாசிரியர் கவிஞர் க.பாண்டிச்செல்வி ஏற்புரை வழங்கி னார்.