மருத்துவர் சுந்தர்ராமன் எழுதிய ‘நலவாழ்வு சேவைக்கான உரிமை’, ‘THE RIGHT TO HEALTH CARE’ ஆகிய நூல்கள் வெளியீட்டு விழா ஞாயிறன்று (ஜூலை 16) சென்னையில் நடைபெற்றது. தமிழ் நூலை பேரா.சி.இ.கருணாகரன் வெளியிட தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் பொதுச் செயலாளர் எஸ்.சுப்ரமணி பெற்றுக் கொண்டார். ஆங்கில நூலை தமிழ்நாடு திட்டக்குழு உறுப்பினர் மருத்துவர் அமலோற்பவநாதன் வெளியிட தி.சாந்தி பெற்றுக் கொண்டார். மு.மாணிக்கத் தாய் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், முனைவர் கல்பனா கருணாகரன், பேரா.சந்திரா, அறிவியல் இயக்க தென்சென்னை மாவட்ட செயலாளர் சுதாகர், தலைவர் மோகனா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.