ஏ.முகமது ரியாஸ் கேரள பொதுப்பணித்துறை மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர்
அடிப்படை வசதிகளை மேம்படுத்த சிறப்பான ஏற்பாடுகளைச் செய்வது என்கிற குறிக்கோளுடன் திட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. நாட்டுக்கு புதிய அனுபவங்களை பகிர்ந்துகொள்ளும் வளர்ச்சித்திட்டங்கள் கேரளத்தில் நடைபெறுகின்றன. தேசிய நெடுஞ்சாலை மேம்பாடு, முக்கிய சாலைகளில் வளைவுகள் இல்லாத கேரளம், மலையோர நெடுஞ்சாலை, கடற்கரை நெடுஞ்சாலை போன்ற பெருந்திட்டங்கள் அதிவிரைவாக முன்னேற்றம் அடையத்தொடங்கி உள்ளன. காசர்கோடு முதல் திருவனந்தபுரம் வரை நீளும் தேசிய நெடுஞ்சாலை-66 சீரான வளர்ச்சி காணத் தொடங்கியுள்ளது. அனைத்து பகுதிகளிலும் (ரீச்) டெண்டர் நடவடிக்கைகள் நிறைவு பெற்றதோடு மாநிலம் முழுவதும் செயல்பாடுகளை தொடங்க முடியும். நிலம் கையகப்படுத்தல் பெருமளவு நிறைவேறிவிட்டது என்பது செயல்பாடுகளை விரைவுபடுத்தும். இதர பகுதிகளிலிருந்து மாறுபட்டதாக தேசிய நெடுஞ்சாலை வளர்ச்சிக்கான நிலம் கையகப்படுத்தற்கு தேவையான நிதியில் 25 சதவிகிதம் கேரள அரசு ஏற்றுக்கொள்கிறது. இடது முன்னணி அரசு தேசிய நெடுஞ்சாலை வளர்ச்சியை சாத்தியப்படுத்த நிலம் கையகப்படுத்த மட்டும் ரூ.5300 கோடியைவிட அதிகம் இதுவரை செய்துள்ளது. திருவனந்தபுரத்தின் விரிவான வளர்ச்சியை நோக்கமாக கொண்டு வெளிப்புற சுற்றுச்சாலை (அவுட்டர் ரிங்ரோடு) திட்டத்திற்கான பணியும் துவக்கப்பட்டுவிட்டது. இங்கும் நிலம் கையகப்படுத்தலுக்கான 50 சதவிகிதம் தொகையை மாநில அரசே ஏற்றுள்ளது. சாலை மேம்பாட்டுக்கு இணையாக பொருளாதார, வணிகத்துறையிலும் மேம்பாடு என்பதை சாத்தியமாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்கள் காலவரையறையுடன் நிறைவேற்ற சிறப்புச் செயல்திட்டத்தை பொதுப்பணித்துறை உருவாக்கி செயல்படுத்துகிறது. ஒவ்வொரு மாதமும் தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களை ஆய்வு செய்ய உயர்மட்ட கூட்டங்கள் நடைபெறும். திட்டங்களின் வளர்ச்சியை உறுதிசெய்வதுடன் தேவையான முடிவுகள் இத்தகைய கூட்டங்களில்தான் எடுக்கப்படுகின்றன. மாவட்டங்களிலும் சிறப்புக் கூட்டங்கள் நடத்தி தேசிய நெடுஞ்சாலைப் பணிகளின் முன்னேற்றம் குறித்து விவாதிக்கப்படுகிறது. கேரளத்தில் மிகவும் ஆபத்து நிறைந்த பாதையான மலையோர நெடுஞ்சாலை திட்டத்தை நிறைவு செய்வது என்கிற நோக்கத்துடன்கூடிய செயல்பாடுகள் நடைபெற்று வருகின்றன. 1251 கிலோமீட்டர் ஆபத்து நிறைந்த சாலையில் 915 கிலோமீட்டர் தூரம் தனியாக மேம்படுத்தப்படுகிறது. இதில் 739.34 கிலோமீட்டர் மேம்படுத்தப்பட்டுவிட்டது. மாநிலத்தின் கடலோர வளர்ச்சியை சாத்தியமாக்கும் கடலோர சாலைப் பணிகளும் வேகமாக நடைபெற்று வருகின்றன. முக்கியச் சாலைகளில் வளைவுகளில்லாத கேரளம் பொதுப்பணித்துறையின் முன்னுரிமை திட்டங்களில் இடம்பெற்றுள்ளதாகும். இதில் 72 ரயில்வே மேம்பாலங்கள் அமைக்கப்படுகின்றன. இதில் ஒரு மேம்பாலப்பணி நிறைவடைந்துள்ளது. பத்து மேம்பாலங்கள் இந்த ஆண்டில் கட்டி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. சாலைகள் வண்ணமயமான சாலைகளாக மேம்படுத்தப்பட்டும் சந்திப்புகளில் போக்குவரத்து நெருக்கடியை தவிர்க்க சிறப்புத் திட்டம் செயல்படுத்தியும் இடையூறில்லா சாலைச் சங்கிலி உருவாக்கப்படுகிறது.
காலவரையறைக்குள் உயர் தரத்தில் ஒளிர்விடும் சாலைகளை பொதுப்பணித்துறை அமைத்து வருகிறது. சாலை அமைப்பது போலவே சாலை பராமரிப்புக்கும் முன்னுரிமை அளிக்கப்படுகிறது. ஏழு ஆண்டுகள் பராமரிப்பை நடப்பில் உள்ள ஒப்பந்ததாரர்கள் மேற்கொள்ளவும், இந்த காலக்கெடு நிறைவடைவதை முன்னறிவிப்பு செய்வதை அவர்களது பொறுப்பாக்கியும் இத்துறையில் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது. புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அதிக காலம் தாக்குப்பிடிக்கும் சாலைகள் அமைக்கப்படுகின்றன. புதிய அறிவியல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இத்தகைய செயல்பாடுகளின் பகுதியாக பொதுமக்களை ஈடுபடுத்துவது பொதுப்பணித்துறையால் சாத்தியமாகி உள்ளது. கேரள பொதுப்பணித்துறையின் ஓய்விடங்கள் ஆன்லைனில் முன்பதிவு செய்துகொள்ளும் மக்கள் ஓய்விடங்களாக மாற்றப்பட்டுள்ளன. பொதுமக்கள் பொதுப்பணித்துறையின் செயல்பாடுகளில் பார்வையாளர்களல்ல பாதுகாவலர்கள் என்கிற கொள்கையை இந்த துறை செயல்படுத்தி வருகிறது. கேரவன் டூரிசம் கோவிட்டைத் தொடர்ந்து நெருக்கடிக்கு உள்ளாகி இருந்த சுற்றுலாத்துறையில் மனிநிறைவு அளிக்கத்தக்க மாற்றங்களை செய்ய முடிந்தது. புதிய திட்டங்களை அறிமுகம் செய்து சுற்றுலாத் துறை செயல்படுகிறது. ‘காரவன் டூரிசம்’ என்பது கேரளத்தின் புதிய தயாரிப்பாகும். இதன் மூலம், எண்பதுகளுக்குப் பிறகு முதன்முறையாக கேரள சுற்றுலா பயணிகளுக்கு புதிய சுற்றுலா அனுபவத்தை அளித்துள்ளது. கேரவன் டூரிசத்துக்கு கேரளத்தில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. பாதுகாப்பான நல்ல பயண அனுபவத்தை இது வழங்குகிறது. உள்ளூர் சுற்றுலா மையங்களை மேம்படுத்த உள்ளாட்சித்துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் உதவியுடன் டெஸ்டினேசன் சேலஞ்ச் (இலக்கை அடைவதற்கான சவால்) நடைபெறுகிறது. ஒரு பஞ்சாயத்தில் குறைந்தது ஒரு டெஸ்டினேசன் என்பது குறிக்கோள். உள்ளூர் மட்டத்தல் சுற்றுலா மையம் மேம்படுத்தி உள்ளூர் சுற்றுலா செயல்படுத்தப்படும். கலாச்சார கேரளத்தை இணைக்கும் லிட்டரரி டூரிசமும் இயற்கை உற்பத்தி துறையை பாதுகாக்கும் சுற்றுலா புதுமையான அனுபவத்தை அளிக்கும். உணவு சுற்றுலா, வேளாண் சுற்றுலா போன்றவை இந்த துறைக்கு உத்வேகமளிக்கும். பொறுப்புச் சுற்றுலாவின் (உத்தரவாதித்திய டூரிசம்) பகுதியாக சுற்றுலாவை மக்களது வாழ்வின் ஒரு பகுதியாக மாற்றும் திட்டங்களும் செயல்படுத்தப்படுகின்றன. மக்களுக்கு சுற்றுலாவுடனும், சுற்றுலாவுக்கும் உள்ள பொறுப்பை நிறைவேற்றுவதற்கான திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. இவ்வாறு புதிய சுற்றுலா கலாச்சாரம் கேரளத்தில் வடிவம் பெற்று வருகிறது.
தமிழில் சி.முருகேசன்