tamilnadu

img

கேரளத்தில் குழந்தை கடத்தல் குற்றவாளிகளை பிடிக்க உதவிய அறிவியல் தொழில் நுட்பம்

கொல்லம், டிச. 3- கேரள மக்களை கவலையில் ஆழ்த்திய குழந்தை கடத்தலை நேர்த்தியாக கையாண்டு பாதுகாப்பாக குழந்தையை மீட்டனர் காவல்துறையினர். அறிவியல் தொழில் நுட்பத்தின் உதவியுடன் கடத்தலில் ஈடுபட்ட  பொறியாளரின் குடும்பத்தை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். காவல் நிலையம் முன்பு திரண்ட மக்கள் கரவொலி எழுப்பி காவல்துறையினருக்கு பாராட்டு தெரிவித்தனர். கொல்லம் ஓயூரைச் சேர்ந்தவர் ரெஜி ஜான். இவரது  மகள் அபிகேவல் சாரா (6) வை ஒரு கும்பல் கடந்த நவம்பர் .27 மாலையில் கடத்திச் சென்று ரூ.10 லட்சம்கேட்டு மிரட்டியது. காவல்துறையில் புகார் அளிக்கப்பட்ட தைத் தொடர்ந்து சிசிடிவி பதிவுகள் பரிசோதனை செய்யப்பட்டன. திருவனந்தபுரம் டிஐஜி நிஷாந்தினி தலைமையில் கொல்லம் நகர மற்றும் ஊரக காவல்துறை அதிகாரிகள் கொண்ட உயர்நிலைக் குழுக்கள் அமைக்கப்பட்டன. தென் மண்டல ஐஜி ஸ்பர்ஜன் குமார் விசாரணையை மேற்பார்வையிட்டார். 200-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பல்வேறு குழுக்க ளாக தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அதன் விளைவாக சிறுமியுடன் தப்பிக்க முடியாத நிலை ஏற்பட்டது.

கொல்லத்தில் மைதானம் ஒன்றில் சிறுமியை விட்டுவிட்டு தப்பினர். சிறுமியை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்த காவல்துறையினர் விசாரணையை தீவிரப்படுத்தினர். சிறுமிக்கு மடிக்கணினியில் கார்ட்டூன் காட்டியதாக கூறியதைத் தொடர்ந்து தகவல் தொழில் நுட்ப உதவியு டன் குற்றவாளிகளை கண்டறிந்தனர். தமிழக எல்லையில் செங்கோட்டை அருகில் உள்ள புளியறையில் வைத்து பொறியியல் பட்டதாரியான கே.ஆர்.பத்மகுமார் (52), அவரது மனைவி எம்.ஆர்.அனிதா குமாரி (45), யூ டியூபரான மகள் பி.அனுபமா (20) ஆகியோ ரை சனிக்கிழமை அதிகாலை 1 மணிக்கு பூயப்பள்ளி காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து கைது செய்தனர். ஞாயி றன்று தகவல் அறிந்த மக்கள் காவல்நிலையம் முன்பு குவிந்த னர். காவல்துறையின் சிறப்பான பணிக்கு வாழ்த்துக்களை தெரிவித்து கரவொலி எழுப்பினர். குற்றம்சாட்டப்பட்டோர் மீது சிறார் நீதிச் சட்டம், இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.