சென்னை,மார்ச் 3- எல்.ஐ.சி பங்கு விற்பனைக்கு எதிராக போராட்டம் வலுக்கிறது. மார்ச் 5 அன்று தமிழகத்தில் 17 நகரங்களில் தொடர் முழக்க போராட்டமும், மார்ச் 6 அன்று மக்கள் சந்திப்பு இயக்கமும் நடைபெறவுள்ளது என்று தென் மண்டல இன்சூரன்ஸ் ஊழியர் கூட்ட மைப்பின் பொதுச் செயலாளர் டி.செந்தில் குமார் தெரிவித்துள்ளார். எல்.ஐ.சி பங்கு விற்பனைக்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ள வேளையிலும் ஒன்றிய அரசு அதில் பிடிவாதம் காண்பிக்கிறது. ஏற்கெனவே தனி மசோதாவாக நாடாளு மன்றத்தில் திருத்தங்களை மேற்கொள்ளா மல் பட்ஜெட் உடன் சேர்ந்த நிதி மசோதா வுக்குள் திணித்து நிறைவேற்றியது. தற்போது தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகேல் போன்றவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
பொருளாதார நிபுணர்கள் அரசின் முடிவை விமர்சித்துள்ளனர். ஆகவே அரசு இத்த கைய கருத்துக்களை பரிசீலித்து தனது முடிவை மாற்றிக் கொள்ள வேண்டும் என்றும் இதை மீறி அரசு பங்கு விற்பனையை நிறைவேற்ற முனைந்தால் அதே நாளில் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவார்கள் என்றும் தெரிவித்துள்ளார். மார்ச் 5 அன்று தேசிய அளவிலான தொடர் முழக்க போராட்டம் புது தில்லி ஜந்தர் மந்தரில் நடைபெறவுள்ளது. தமிழ்நாட்டில் சென்னை, வேலூர், புதுச்சேரி, கோவை, ஈரோடு, சேலம், தஞ்சா வூர், திருச்சி, கரூர், திருவாரூர், மதுரை, திண்டுக்கல், காரைக்குடி, திருநெல்வேலி, நாகர்கோவில், தூத்துக்குடி, தென்காசி ஆகிய நகரங்களில் தர்ணா நடைபெறுகிறது. இதில் புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயண சாமி (காங்கிரஸ்) ,அமைச்சர் இ. பெரியசாமி (திமுக) நாடாளுமன்ற உறுப்பினர்கள் திருச்சி சிவா, முன்னாள் மத்திய அமைச்சர் எஸ்.எஸ். பழனி மாணிக்கம், சிபிஎம் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன், சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசன் மற்றும் ஆர்.கே.கோபிநாத், ரமேஷ்குமார், ஜானகிராமன் (தென் மண்டல இன்சூரன்ஸ் ஊழியர் கூட்டமைப்பு) ஆகியோர் உள்ளிட்ட தலைவர்கள் உரையாற்றுகிறார்கள். தமிழ்நாடு முழுவதும் ஜனவரி 6 அன்று எல்.ஐ.சி பங்கு விற்பனைக்கு எதிராக 200 நகரங்களில் மக்கள் சந்திப்பு இயக்கங்கள் நடத்தப்படவுள்ளன.