சென்னை,நவ.14- சென்னை மாதவரம் தபால்பெட்டி யில் மெட்ரோ ரயில் நிலையம் அமைக்கும் 2ஆம் கட்ட திட்டத்த்தை அப்படியே செயல்படுத்தவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மெட்ரோ நிர்வாகம் ஏற்கனவே முன்மொழிந்த திட்டத்தை அமல்படுத்த வேண்டும என மாதவரம் பழனிப்பா நகர் குடியிருப்போர் நலசங்கம் வலி யுறுத்தியுள்ளது. சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் 2வது கட்டம் ரூ.63,246 கோடியில் செயல்படுத்தப் பட்டுள்ளது. இத்திட்டத்தில் 3 வழித்தடங்களில் 118.9 கி.மீ. தொலைவுக்கு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் ஒரு வழித்தடம் மாதவரம்-சோழிங்கநல்லூர் (47 கி.மீ. தொலைவு) வழித்தடமாகும். இது41.2 கி.மீ. தொலைவுக்கு உயர்நிலைப் பாதையாகவும், 5.8 கி.மீ.தொலைவுக்கு சுரங்கப் பாதை யாகவும் அமைகிறது.
இந்த நிலையில் மாதவரம் தபால் பெட்டியில் மெட்ரோ ரயில்நிலையம் அமைக்க இருந்த முந்தைய திட்டம் மாற்றப்பட்டு ஒரு கி.மீ தூரம் தள்ளி அமைக்கப்படுவது அப்பகுதி குடியிருப்பு வாசிகளை அதிர்ச்சியடைய செய்துள்ளது. இது குறித்து பழனியப்பா நகர் குடி யிருப்போர் நல சங்கத்தின் தலை வர் டி.கே.மோகனதாஸ் கூறுகை யில், மெட்ரோ நிர்வாகம் தந்த தகவலின் அடிப்படையில் பால்பண்ணை முதல் சிப்காட் வரையிலான மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட3ஆவது வழித்தடத்திட்டத்தில் தபால்பெட்டி மெட்ரோ ரயில் நிலையம் அகற்றப்பட்டுள்ளது. மாதவரம் தபால்பெட்டி அம்பேத்கர் சிலை அருகில் ஒய் (Y) வடிவிலான சந்திப்பு உள்ளது. இங்கு ஆயிரக் கணக்கான வீடுகள், வர்த்தக நிறு வனங்கள், பள்ளிக்கூடங்கள் என பல்லாயிரக்கணக்கானோர் புழங்கும் பகுதியாகும். மெட்ரோ நிர்வாகம் முன் வரை யறுக்கப்பட்ட திட்ட அறிக்கையின் படி (டிபிஆர்) தபால்பெட்டி ரயில் நிலையத்திற்கான இடத்தை தெரிவு செய்து, பாதிக்கப் பட்டோருக்கு இழப்பீடு அளித்து, அங்குள்ள ஆழ்துளை கிணறு களை மாற்று இடத்தில் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது. வரை யறுக்கப்பட்ட 100 அடி மாதவரம் நெடுஞ்சாலை வழியாக தபால்பெட்டி மெட்ரோ ரயில் நிலையம் அமைக்கும் திட்டத்தை நிர்வாகம் மாற்றியதற்கான காரணத்தை இதுவரை தெரிவிக்கவில்லை. ஆகவே நிர்வாகம் பழனியப்பா நகர் வாழ்மக்களுக்கு உரிய பதிலை அளிக்கவேண்டும் என கேட்டுக்கொண்டார்.
குடியிருப்போர் நல சங்கத்தின் செயலாளர் ஜெயச் சந்திரன் கூறுகை யில், மாதவரம் வேணுகோபால் நகரில் முதல் சுரங்க மெட்ரோ ரயில் நிலையம் அமைக்கும் பணிகள் வேக மாக நடைபெறுகிறது. நிலத்தில் இருந்து 52 அடி ஆழத்தில், 492 அடி நீளம், 62 அடி அகலத்தில் இந்த மெட்ரோ ரயில் நிலையம் அமைகிறது. மாதவரம்-சோழிங்கநல்லூர் வழித்தடத்தில் உயர்நிலைப் பாதை யில் 42 நிலையங்கள், சுரங்கப் பாதை யில் 6 நிலையங்கள் என்று 48 மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைய உள்ளன. தற்போது மாற்றம் செய்யப்பட்ட முராரி மருத்துவமனை நிலை யம், மாதவரம் பால் பண்ணை நிலை யத்தோடு ஒப்பிடுகையில் தபால்பெட்டி மெட்ரோ ரயில் நிறுத்தம் அதிக பயணிகளை கொண்ட இட மாக உள்ளது. ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட இடத்தில் ரயில்நிலையம் அமைக்கப்பட்டால் அரசு நிர்வாகத்திற்கு வருவாயும், பொதுமக்களுக்கு இலகுவான பயணமும் அமையும் என்று கூறினார். இதுகுறித்து மெட்ரோ அதிகாரி ஒருவர் பேசுகையில், தபால் பெட்டி அம்பேத்கர் சிலை அருகில் உள்ள ஒய் வளைவில் ரயில் திரும்புவதில் சிரமம் உள்ளதாகவும் கட்டுமான பணி யின் போது சிற்சில மாற்றங்கள் ஏற்படுவது தவிர்க்க இயலாது என்றும் கூறினார்.
கே.கே.ஆர் கார்டன் குடியி ருப்போர் நலசங்கத்தினர் கூறுகையில் நாங்கள் புதிய கோரிக்கைகள் எது வும் வைக்கவில்லை. ஏற்கனவே வரைவு திட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவை அமல்படுத்தவேண்டும் என்பதே எங்களின் கோரிக்கை என்றார். தபால்பெட்டி மெட்ரோ ரயில்நிலை யம் அமைக்கவேண்டும் என கோரிக்கை வைத்து கடந்த அக்டோ பர் 29 அன்று ஆர்ப்பாட்டம் நடத்த முற்பட்டபோது காவல்துறை அனுமதி மறுத்துவிட்டது. இருப்பினும் எங்கள் குடியிருப்பு பகுதியில் இதுகுறித்து பிரச்சாரக்கூட்டம் நடத்தினோம். மெட்ரோ நிர்வாகத்தின் தவறான முடிவுக்கு சில கட்டுமான நிறு வனங்களின் தூண்டுதலாக இருக்க லாம் என கூறப்படுகிறது. தபால்பெட்டி மெட்ரோ நிலையம் அமைத்தே தீரவேண்டும் இல்லை எனில் போராட்டத்தை தொடருவதில் இப்பகுதி மக்கள் உறுதியாக உள்ளனர். -ந.நி