சென்னை, செப். 29 - பணி ஓய்வு பெறும் தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய பணப்பலன்கள் 1200 கோடி ரூபாயை வழங்க கோரி வியாழ னன்று (செப்.29) தமிழகம் முழுவதும் போக்கு வரத்து ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வேலைக்கு வந்தும் பணி மறுக்கப்படும் தொழிலாளர்களுக்கு மாற்றுப்பணி வழங்க வேண்டும், ஓய்வு பெறும் நாளன்றே பணப் பலன்களை வழங்க வேண்டும், நீதிமன்ற தீர்ப்பு அடிப்படையில் ஓய்வூதியர்களுக்கு அகவிலைப்படி உயர்வை வழங்க வலியு றுத்தி அரசாங்க போக்குவரத்து ஊழியர் சங்கம் சார்பில் பல்லவன் இல்லம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது செய்தியாளர்களிடம் தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளன பொதுச்செயலாளர்கே.ஆறுமுக நயினார் கூறியதாவது, போக்குவரத்து கழகத்தில் பணி ஓய்வு பெறும் தொழிலாளர்களுக்கு உரிய காலத்தில் பணப்பயன்களை வழங்கு வதில்லை. 2020 மே மாதத்திற்கு பிறகு மரணம் அடைந்த, விருப்ப ஓய்வு பெற்ற, ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு 1200 கோடி ரூபாயை நிர்வாகம் வழங்காமல் உள்ளது. வருங்கால வைப்பு நிதி சம்பளத்தில் பிடிக்கப்படும் பணம் ரூ12000 கோடியை நிர்வாகம் செலவழித்துவிட்டது. இதனால் ஓய்வு பெறும் தொழிலாளர்களுக்கு பணப்பயன்களை வழங்குவதில்லை.
ஓய்வூதியர்களுக்கு 2015ம் ஆண்டு ஜூலை முதல் அகவிலைப்படி உயர்வு வழங்கா மல் உள்ளனர். நீதிமன்றம் உத்தரவிட்டும் வழங்காமல் உள்ளனர். தொழிலாளர்களை, ஓய்வூதியர்களை அரசும் நிர்வாகமும் வஞ்சிக்கிறது. தொழிலாளர்களில் பலர் ஓய்வு பெற்று இறந்த பிறகும் கூட பணப் பயன்கள் கிடைக்காத நிலை உள்ளது. போக்குவரத்து துறையில் 15ஆயிரம் இடங்கள் காலியாக உள்ளன. குறிப்பாக மாநகர் போக்குவரத்து கழகத்தில் 1000 இடங்கள், விரைவு போக்குவரத்து கழகத்தில் மட்டும் 3ஆயிரம் இடங்கள் காலி யாக உள்ளன. இதனால் பேருந்துகளை இயக்க முடியவில்லை. தொழிலாளர்கள் இரட்டிப்பு பணி செய்ய வேண்டி உள்ளது. எனவே, காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். அதிமுக ஆட்சியில் போடப்பட்ட 8 அரசாணைகளை ரத்து செய்தால்தான் புதி தாக ஆட்களை எடுக்க முடியும். அதனை அரசு செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். இந்தப் போராட்டத்திற்கு சங்கத்தின் தலைவர் ஆர்.துரை தலைமை தாங்கி னார். சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்தர ராசன், சம்மேளன பொருளாளர் சசி குமார், சங்கத்தின் பொதுச்செயலாளர் வி.தயானந்தம், பொருளாளர் ஏ.ஆர்.பாலாஜி உள்ளிட்டோர் பேசினர்.