சென்னை, செப்.17- தமிழ்நாட்டில் விளையாட்டுத் துறையை மேம்படுத்த ‘சாம்பியன்ஸ்’ அறக்கட்டளை தொடங்கப்பட்டுள்ளது. பொருளியில் ரீதியாக பின்தங்கியுள்ள விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும் வகையில் இந்த அறக்கட்டளை செயல்படும் என அறிவிக்கப்பட் டுள்ளது. அறக்கட்டளை தொடக்க விழாவின் போதே முதல்வர் மு.க.ஸ்டாலின் தன் சொந்த நிதியாக ரூ.5 லட்சத்தை வழங்கி உள்ளார் என விளையாட்டு மேம்பாடு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சமூக ஊடகப் பதிவில் குறிப்பிட்டுள்ளார். “ஏழை, எளிய பின்புலத்தைச் சேர்ந்த திறமை மிக்க விளையாட்டு வீரர், வீராங்கனையருக்கு விளையாட்டு உபகரணங்கள் வாங்குவது, பன்னாட்டு போட்டிகளில் கலந்து கொள்ள பயணம் உள்ளிட்ட செலவினங்களுக்கு உதவு வது போன்றவற்றுக்காக தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளையில் இருந்து நிதி உதவி அளிக்கப்படும். “அவ்வாறு நிதி பெற்றுச் செல்லும் நம் வீரர், வீராங்கனைகள் வெற்றிக் கிண்ணங்கள், பதக்கங்களுடன் திரும்பி வருகின்றனர். தமிழ்நாட்டை இந்திய விளையாட்டுத்துறையின் தலை நகராக்குவோம்,” என்று அமைச்சர் உதயநிதி மேலும் குறிப்பிட்டுள்ளார்.