மாநில மாநாட்டின் நுழைவுவாயிலில் அமைக்கப்பட்டிருந்த தியாகிகள் ஸ்தூபி தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் - கலைஞர்கள் சங்கத்தின் மாநிலச் செயலாளர் ஆதவன் தீட்சண்யா, மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் ஆகியோரின் வழிகாட்டுதலோடு வடிவமைக்கப்பட்டது என்றார் கே.ஆர்.கார்த்திகேயன் (49) சென்னையைச் சேர்ந்தவர். இவரது தாத்தா, தந்தை என இவரது குடும்பமே பாரம்பரிய ஓவியக் குடும்பம். 2019-ஆம் ஆண்டு தமிழக அரசின் சிறந்த ஓவியருக்கான விருதைப் பெற்றுள்ளார். தியாகிகள் ஸ்தூபி என்ன செய்தியைச் சொல்கிறது. இரண்டு கைகளும் அரிவாள் சுத்தியலை தாங்கியுள்ளதே எனக் கேட்டதற்கு, ஒவ்வொருவரும் அதைப் பார்ப்பதுதான் செய்தி. ஓவியம் என்பது பார்த்தவுடன் உணர்வைப் பிரபதிபலிக்கும். நான் தீட்டிய முதல் ஓவியச் சிற்பம் இது தான். ஆதவன் தீட்சண்யா கம்யூனிஸ்ட் இயக்கம் பல்வேறு கட்டங்களைத் தாண்டி தாங்கி வளர்ந்த இயக்கம். இதற்கேற்றாற்போல் ஸ்தூபியை வடிவமைக்கச் சொன்னார். அதனடிப்படையில் மூன்று கட்டங்களைத் தாண்டி நான்காவது கட்டத்தில் கைகளில் அரிவாள் சுத்தியல் உள்ளது. இதன் இரு புறத்திலும் பல்வேறு காட்சிகள் இடம் பெற்றுள்ளன. மனிதநேயம் சார்ந்த படைப்பாளிகளுடன் நானும் பயணிக்கிறேன் என்றார் பெருமையுடன். இந்த ஓவிய சிற்பக் கலைஞருக்கு துணை நின்றவர் ஆர்.சுதிர்குமார்.