tamilnadu

அரசு ஊழியர் ஓய்வு வயது நீட்டிப்பு உத்தரவை கண்டித்து ஆர்ப்பாட்டம்

மதுரை, மே 8- அரசு ஊழியர் ஓய்வு பெறும் வயதை 58 லிருந்து 59  ஆக உயர்த்திய தமிழக அர சின் உத்தரவை திரும்பப் பெறக்கோரி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் மதுரை மாவட்டத்தில் தல்லாகுளம் பொதுப்பணித்துறை அலுவ லகம் துவங்கி  இணைபதி வாளர் அலுவலகம், கிழக்கு,  மேற்கு ஊராட்சி அலுவலகம், நெடுஞ்சாலைத்துறை அலு வலகம், அரசு அச்சகம், மதுரை மருத்துவக்கல்லூரி, மாவட்டக் கருவூலம், அரசு ராசாசி மருத்துவமனை, திருப்பரங்குன்றம் ஊராட்சி அலுவலகம், திருமங்கலம், பேரையூர், உசிலம்பட்டி, வாடிப்பட்டி, மேலூர் ஆகிய  வட்டக்கிளைகளில் வெள்ளி யன்று நடைபெற்றது. இதில்  மாநில பொதுச் செயலாளர் ஆ. செல்வம், மாவட்டத் தலைவர் ஜெ. மூர்த்தி, மாவ ட்டச் செயலாளர்  க.நீதி ராஜா, மாநில துணைத் தலை வர் மொ. ஞானதம்பி, மாநில செயற்குழு உறுப்பினர் இரா. தமிழ், தமிழ்நாடு அரசு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் மாநில செயற்குழு உறுப்பினர் சந்திரன்,  அரசு ஊழியர் சங்க மாவட்ட துணை தலை வர் மகேந்திரன் ,இணைச் செயலாளர் நவநீதன் உள்ளி ட்ட வட்ட கிளை நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

தமிழ்நாடு அரசு ஊழி யர் சங்கத்தின் மாநில பொது ச்செயலாளர் ஆ. செல்வம் செய்தியாளர்களிடம் பேசு கையில், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பாக இன்று (வெள்ளியன்று)  தமி ழகம் முழுவதும் அரசு அலுவ லங்கள் முன்பாக போராட்டம் நடைபெறுகிறது. தற்போது கரோனா வைரஸ் தொற்று  பரவலைக் கட்டுப்படுத்த அரசு ஊழியர்கள் அர்ப்ப ணிப்பு உணர்வுடன் பணி யாற்றி வருகின்றனர். இதுகு றித்து தமிழக அரசின் அனைத்து உத்தரவுகளை யும் மதித்து பணியாற்றி வரு கின்றனர். 

இந்த நேரத்தில் தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் ஓய்வு பெறும் வயது வரம்பை 58  லிருந்து 59 ஆக அதிக ரித்துள்ளது இந்த உத்தரவை  தமிழக அரசு உடனடியாக வாபஸ் பெற வேண்டும். தமிழ்நாட்டில் தற்போது 80  லட்சம் இளைஞர்கள் வேலை  வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துவிட்டு காத்துக் கொண்டிருக்கிறார்கள். அதேபோன்று தமிழக அர சின் பல்வேறு துறைகளில் 4  லட்சத்திற்கு மேல் பணியி டங்கள் காலியாக உள்ளன. மூன்று லட்சத்திற்கும் மேற்பட்டோர் தொகுப்பு ஊதி யத்தில் பணி செய்து கொண்டிருக்கிறார்கள். இவர்களை  நிரந்தர பணியா ளர்களாக அறிவிக்காமல் தற்போதைய ஓய்வு வயது வரம்பை அதிகரித்திருப்பது அந்த இளைஞர்களுக்கு செய்யும் துரோகம்.

தற்போது பணி செய்யும் அரசு ஊழியர்களின் அக விலைப்படியை கடந்த 18 மாதங்களாக வழங்காமல் இழுத்தடித்து வருகிறது. இதன் வாயிலாக 15 ஆயிரம் கோடியை தமிழகஅரசு வரு மானமாக ஈட்டுகிறது. அதே போன்று வருங்கால வைப்பு  நிதியின் வட்டி விகிதத்தை 7.9 இலிருந்து 7.1 ஆக  குறைத்துள்ளது. இந்த அரசா ணைகள் அனைத்தையும் தமிழக அரசு உடனடியாக வாபஸ் பெற வேண்டும் என்றார்.