tamilnadu

img

அரசு ஊழியர் ஓய்வு பெறும் வயது நீட்டிப்பு: சிபிஐ கண்டனம்

சென்னை, மே 8- அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை உயர்த்தும் உத்தரவை, தமிழ்நாடு அரசு ரத்து செய்யு மாறு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. அரசு ஊழியர்கள், ஆசிரி யர்கள் மற்றும் அரசின் கீழ் இயங்கும் பொதுத்துறை நிறு வனங்கள், தன்னாட்சி அமைப்புகளில் பணியாற்றி வருவோரின் ஓய்வு வயது 58  என்பதை 59ஆக உயர்த்தி  தமிழ்நாடு அரசு உத்தரவிட் டது. இந்த உத்தரவு மூலம், இந்த மாதம் 31ஆம் தேதி  ஓய்வு பெறுவோர் அனை வரும், மேலும் ஓராண்டு காலம் பணியாற்ற வேண்டிய  நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து அக்கட்சி யின் மாநிலச் செயலாளர்  முத்தரசன் வெளியிட்டி ருக்கும் அறிக்கையில் கூறி யிருப்பதாவது:-

ஏறத்தாழ ஒரு கோடி பேர் உயர்கல்வி பெற்று, பல்  வேறு திறன்களில் பயிற்சி யுடன் வேலை வாய்ப்பு அலு வலகங்களில் பதிவு செய்து  காத்திருக்கும் போது, அதி முக்கியத்துவம் வாய்ந்த  பணிகளில்கூட ஒப்பந்தப் பணியாளர்கள் பணி புரிந்துவரும் நிலையில், பணி ஓய்வு பெறும் வயதை  உயர்த்தி இருப்பது வேலை யின்மை வேதனையில் வீழ்ந்து கிடப்பவர்களை வஞ்சிப்பதாகும். பணியில் உள்ளோரின் பணி உயர்விலும், கடுமை யான பாதிப்புகளை ஏற்ப டுத்தும். வேலை தேடி வரு வோருக்கும், வேலையில் இருப்பவர்களுக்கும் கடுமை யான பாதிப்புகளை ஏற்படுத்  தும். ஓய்வு பெறும் வயதை  உயர்த்தும் அரசின் உத்த ரவை விரைந்து ரத்து செய்ய  வேண்டும். இவ்வாறு முத்தரசன் தெரிவித்திருக்கிறார்.