tamilnadu

img

திருவண்ணாமலை சுங்கச் சாவடியை அகற்றும் போராட்டம்

இன்று சிபிஎம் தலைமையில் நடக்கிறது

அண்மையில் நாடாளுமன்றத்தில் திமுகவை சார்ந்த உறுப்பினர் வில்சன் அவர்கள், ஒரு பிரச்சனையை கிளப்பினார். தேசிய நெடுஞ்சாலைய ஆணையத்தின் விதிகளின் படி. தமிழகத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலை களில் மொத்தமாக 18 சுங்கக் கட்டண மையங்கள் தான் இருக்க வேண்டும். ஆனால் 48 இருக்கின்றன.  சட்டத்தை மீறி  அமைக்கப்பட்டுள்ள சுங்கக் கட்டண மையங்களை அகற்ற வேண்டும் என கோரிக்கை வைத்தார். இதற்கு பதிலளித்து பேசும் போது ஒன்றிய நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்காரி, நாடு முழுவதுமுள்ள - விதிகளுக்கு புறம்பாக அமைக்கப்பட்டுள்ள சுங்கக் கட்டண மையங்கள் அனைத்தும் அடுத்த மூன்று மாதங்களுக்குள் முழுமை யாக அகற்றப்படும் என அறிவித்தார். நாடாளுமன்ற அவையில் அமைச்சர் அளித்த வாக்குறுதியின்படி தமிழகத்தில் அகற்றப்பட வேண்டிய சுங்கச் சாவடிகள் குறித்த கணக்கெடுப்பை நடத்தி, 32 சுங்கக் கட்டண மையங்கள் அடங்கிய பட்டியலை  ஒன்றிய அரசுக்கு அனுப்பி வைத்திருப்ப தாக மாநில நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் எ.வ.வேலு அவர்களும் ஊடகங்களி டம் தெரிவித்திருக்கிறார். ஒன்றிய அரசும், மாநில அரசும் இணைந்து அறிவித்த காலத்திற்குள் உரிய நடவடிக்கை எடுக்கப்படுமா? கட்டணக் கொள்ளையி லிருந்து மக்களுக்கு விடிவு கிடைக்குமா?  சுங்கச்சாவடி எனும் பெயரால் மக்களை “சாவடி” க்கும் காரியத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுமா என அடுக்கடுக்காய் கேள்விகள் தொடர்கின்றன.

தங்க நாற்கர சாலையா -  சுங்க நாற்கர சாலையா?

பல்வேறு மோசமான மக்கள் விரோத நடவடிக்கைகளை எடுத்துவரும் பாஜக அரசுதான் இந்த கட்டணக் கொள்ளை முறைக்கும் காரணம். 2004 முதல் 2009 வரை யிலான ஆண்டுகளில் பாஜக ஆட்சியில் இருந்தபோது  “தங்க நாற்கர சாலை” எனும் திட்டம் மிக படாடோபமாக அறிவிக்கப் பட்டது. நாட்டின் நான்கு முனைகளையும் இணைக்கும் வகையில்  5846 கி.மீ நீளத்திற் கான தங்க நாற்கர சாலை திட்டத்திற்கான மதிப்பீடாக 7.5 பில்லியன் டாலர் அதாவது சுமார் ரூ.60,000 கோடி ரூபாய் என இறுதி செய்யப்பட்டது. முதலில் தங்க நாற்கர சாலை திட்டத்தை நிறைவேற்றுவது, பிறகு  இந்த சாலையோடு இதர தேசிய நெடுஞ்சாலைகளையும் இணைப்பது என முடிவு  செய்யப்பட்டது.  இத்திட்டங்களை நிறைவேற்றுவதற்காக பெருமளவில் தொகை செலவாகும் என்பதால், தனியார்  நிறுவனங்களையும் இணைத்துக் கொள்வ தென முடிவெடுக்கப்பட்டு, BOOT (Build Own, Operate, Transfer) எனும் திட்டமும் அறிமுகப்படுத்தப்பட்டது.

இதன்படி நாடு முழுவதும் உள்ள தேசிய சாலைகளை  நான்கு வழி மற்றும் ஆறு வழிச்சாலை களாக விரிவாக்கம் செய்திட வேண்டு மெனவும் சாலைகளின் விரிவாக்கத்திற்காக முதலீட்டை அளிக்கும் தனியார் நிறு வனங்கள் தங்கள் முதலீட்டை  திரும்பப் பெறும் வகையில் பயணிகளிடம் 15 ஆண்டு களுக்கு சுங்கக் கட்டணம் வசூலித்துக்  கொள்ளலாம் எனவும் அந்த காலத்திற்கு பிறகு தனியார் நிறுவனங்கள் சுங்கக் கட்டணம் வசூலிப்பதை நிறுத்திக் கொள்ள வேண்டுமெனவும் ஒப்பந்தம் போடப்பட்டது. ஆனால் நிலைமை என்னவெனில் நாடு முழுவதும் உள்ள பல்வேறு தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்கக் கட்டண வசூல்  மையங்கள் அமைத்த தனியார் நிறு வனங்கள் குறிப்பிட்ட காலத்தைத் தாண்டி யும் மக்களிடம் கொள்ளையடித்துக் கொண்டு தான் இருக்கின்றன. தனியார் நிறு வனங்கள் போட்ட முதலீட்டிற்கு ஈடான தொகை வசூலாகவில்லை என்றும், மேலும்  கால நீட்டிப்பை வழங்க வேண்டும் எனவும் அந்நிறுவனங்கள் வைத்த கோரிக்கையை ஏற்று ஒன்றிய அரசு பல இடங்களில் கால நீடிப்பை வழங்கியிருக்கிறது. இன்னும் பல இடங்களில் நீதிமன்றங்களை நாடி ஒப்பந்த காலத்தை நீட்டித்துக் கொண்டுள்ளன தனியார் நிறுவனங்கள். ஆனால் தனியார் நிறுவனங்கள் மேற்கொண்ட முதலீடு எவ்வளவு, இதுவரை அவர்கள் வசூலித்த தொகை எவ்வளவு எனும் எந்தவொரு விபர மும் வெளிப்படையாக இல்லை. மொத்தத்தில் பாஜக அரசு கொண்டு வந்த தங்க நாற்கரசாலை என்பதும் நடை முறையில் “சுங்க நாற்கரசாலை” திட்ட மாகத்தான் உள்ளது. 

நேரான நெடுஞ்சாலைகளும் கோணலான விதிகளும்    

தேசிய நெஞ்சாலைகளில் ஒரு மையத்திற்கும் அடுத்த மையத்திற்கும் குறைந்தது 60 கிமீ தூரம் இடைவெளி இருக்க வேண்டும். ஒரு வேளை குறிப்பிட்ட 60 கி.மீ தூரத்தில் கட்டண மையம் அமைக்க முடியாத சூழல் இருப்பின், நெடுஞ்சாலை ஆணையத்தின் முன் அனுமதியோடு வேறு இடத்தில் அமைத்துக் கொள்ளலாம். ஆனால் தனியார் நிறுவனங்கள் தான் விதிவிலக்குகளை விதியாக மாற்றிக் கொள்வதில் கெட்டிக்காரர்கள் ஆயிற்றே. ஒன்றிய அரசின் ஆசியோடு நாடு முழு வதும் விதிகளை மீறி பல இடங்களில் சுங்கக்  கட்டண மையங்களை தனியார் நிறு வனங்கள் அமைத்துக் கொண்டுள்ளன. பாஜக ஆட்சிக்கு வந்த 2014 ம் ஆண்டில்  நாடு முழுவதும் மொத்தம் 348 சுங்கக் கட்டண மையங்களும், ஆண்டு வரு வாயாக சராசரியாக ரூ.5000 கோடியா கவும் இருந்தது. ஆனால் தற்போது நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கக் கட்டண மையங்களின் எண்ணி க்கை மட்டும் 858 ஆக உயர்ந்துள்ளன. ஓராண்டு சராசரி வருவாய் ரூபாய் ஐம்பதாயிரம் கோடியாக உயர்ந்துள்ளது.  தனியார் நிறுவனங்கள் கட்டணக் கொள்ளையில் ஈடுபடுவதற்கு வசதியாக ஃபாஸ்ட் டேக் எனும் திட்டமும் அறி முகப்படுத்தப்பட்டு, இதுவரையில் ஆறரை கோடி ஃபாஸ்ட் டேக் வில்லைகளும் விநியோ கிக்கப்பட்டிருக்கின்றன. ஃபாஸ்ட் டேக் முறை மக்களின் வசதிக்காகத்தான் என சொல்லப்பட்டாலும் அதிலும் பலனடைவது என்னவோ தனியார் நிறுவனங்கள் தான். உதாரணமாக நாம் ஏற்கனவே கட்டணம் செலுத்தி பயணம் செய்த போது, ஒரு கட்டண மையத்தை கடந்து சென்று 24  மணி நேரத்திற்குள் அதே வழியாக திரும்பி  வருவதாக இருந்தால் ஒரு குறிப்பிட்ட கட்டண சலுகை இருந்தது. ஆனால் ஃபாஸ்ட்  டேக் முறை வந்த பிறகு அது நிறுத்தப்பட்டு விட்டது. இதன் மூலமாகவும் இழப்பு  மக்களுக்குத்தான். 

இடித்து அகற்றும் போராட்டம்

சுங்கக் கட்டண மையங்கள் எனும் பெயரால் தனியார் நிறுவனங்கள் இஷ்டம் போல விதிகளை மீறுவதும், அவற்றை கண்டு  கொள்ளாமல் அவர்களுக்கு சாதகமாக ஒன்றிய அரசு நடந்து கொள்வதுமே  இத்தகைய கட்டணக் கொள்ளைக்கான மூல  காரணமாகும். விதிமீறல்களில் ஈடுபட்டுள்ள சுங்கக் கட்டண மையங்களை மூடுவோம் எனும் ஒன்றிய அமைச்சரின்  அறிவிப்பை விரைவாக நடைமுறைப்படுத்த வேண்டு மென்பதோடு, இவ்வளவு காலத்திற்கு சட்ட விரோதமாக அவர்கள் கொள்ளை யடித்ததற்கு உரிய தண்டனை வழங்கப்படு வதையும், இதுவரையிலும் பல ஆயிரம் கோடிகளை இழந்துள்ள மக்களுக்கு உரிய இழப்பீடு வழங்கப்பட வேண்டுமெனும் கோரிக்கையும் இணைத்து எழுப்பப்பட வேண்டும். சட்டவிரோதமாக அமைக்கப் பட்டுள்ள சுங்கக் கட்டண மையங்களை உட னடியாக அகற்றும் நேரடி நடவடிக்கைகளை யும் மக்களோடு இணைந்து முன்னெடுக்க வேண்டும். அப்படியான ஒரு நேரடி இயக்கம் திருவண்ணாமலை மாவட்டத்தில் மார்ச் 9 (இன்று) நடைபெற உள்ளது.  திருவண்ணாமலை நகரத்தின் எல்லையில் இனாம்காரியந்தல் பகுதியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள சுங்கக் கட்டண மையத்தை அகற்றும் மக்கள் போராட்டம் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் தலைமையில் நடைபெற உள்ளது. இப்போராட்டத்தில் அந்நகரத்தில் உள்ள பொதுமக்கள், வியாபாரிகள், வாகன ஓட்டுநர்கள், தனியார் சீருந்து, பேருந்து உரிமையாளர்கள் என அனைத்து தரப்பின ரும் பங்கேற்க உள்ளனர். 

- ஆர்.பத்ரி