tamilnadu

img

அருந்ததியர்களுக்கு மயானப்பாதை மறுப்பதா?

மதுரை, டிச. 19-  மதுரை மாவட்டம் பேரையூர் தாலுகா அருகே உள்ள சிலைமலைப் பட்டியில் ஆதிதிராவிட அருந்ததியர் மக் களுக்கு மயானப்பாதை மறுக்கப்பட்ட தற்கு கண்டனம் தெரிவித்தும்  மயானப் பாதை அமைத்துத்தரக் கோரியும் ஆதித்தமிழர் கட்சியினர் மதுரை மாவட்ட ஆட்சியரகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மயானப்பாதை மறுக்கப்பட்டதைக் கண்டித்து சிலைமலைப்பட்டியில் டிசம்பர் 17 ஆம் தேதி உயிரிழந்த அருந்ததிய சமூகத்தைச் சேர்ந்த மூதாட்டியின் உடலை வைத்து ஆதித் தமிழர் கட்சியினர் போராட்டம் நடத்தி னர். இதில் கட்சியின் பொதுச்செய லாளர்  விஸ்வைகுமாரர் உட்பட 5  பேர்  கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். கைது செய்யப்பட்ட ஆதித்தமிழர் கட்சியினரை விடுவிக்க வேண்டும். மயானப் பாதை விவகாரத்தில் ஒரு தலைப்பட்சமாக நடந்துகொண்ட அரசு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், மயான பாதைக்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட 22 இலட்சம் ரூபாய் நிதி குறித்து விசாரணை நடத்த  வேண்டும்.  25 ஆண்டுகால மயான பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று வலியுறுத்தி ஆதித்தமி ழர் கட்சியின் நிறுவனர் கு. ஜக்கையன் தலைமையில் டிசம்பர் 19 திங்களன்று அக்கட்சியினர் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.பின்னர் கோரிக்கைகள் அடங்கிய மனுவினை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினர்.