புதுச்சேரியில் காவல் நிலைய மனித உரிமை மீறல்களுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம்
புதுச்சேரி, ஜூன் 11 - புதுச்சேரி தவளக்குப்பம் காவல் நிலையத்தில் காவல் அதிகாரிகளால் மன உளைச்சலுக்கு ஆளாக்கப்பட்டு உயிரிழந்த கூலித்தொழிலாளி அர்ஜுனனின் மரணத்தை கண்டித்து அரசியல் கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. புதுச்சேரி சட்டப்பேரவைக்கு அருகில் நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு சிபிஎம் மாநிலச் செய லாளர் எஸ்.ராமச்சந்திரன் தலைமை தாங்கி னார். சிபிஐ நிர்வாகி அந்தோணி, விசிக மாநிலச்செயலாளர் தேவ.பொழிலன், சிபிஐ(எம்.எல்.) மாநிலத் தலைவர் சோ.பாலசுப்பிரமணியன், மக்கள் உரிமைக் கூட்டமைப்பு தலைவர் சுகுமாரன், திராவிடர் விடுதலை கழகத் தலைவர் சிவ.வீரமணி ஆகியோர் கண்டன உரை யாற்றினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் உரையாற்றிய தலைவர்கள், “அர்ஜுனன் குடும்பத்திற்கு முதல்வர் நிவாரண நிதியில் இருந்து நிவாரணம் வழங்க வேண்டும், அவரது மனைவிக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர். அதேபோல், காவல் நிலையங்களில் நடை பெறும் மனித உரிமை மீறல்களை தடுக்க புதுச்சேரி அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர். இந்த போராட்டத்தில் சிபிஎம் மாநில செயற்குழு உறுப்பினர்கள் வெ.பெருமாள், ஆர். ராஜாங்கம், சீனுவாசன், பிரபுராஜ், கொளஞ்சியப்பன், கலியமூர்த்தி, சத்தியா உட்பட பல்வேறு இடதுசாரி கட்சிகள் மற்றும் ஜனநாயக இயக்கங்களைச் சேர்ந்த ஏராளமானோர் கலந்துகொண்டனர். முன்னதாக, நேரு வீதியில் இருந்து ஊர்வலம் புறப்பட்டனர். பின்னர் காவல்துறை தலைமை இயக்குநர் ஷாலினியைச் சந்தித்து புகார் கடிதம் வழங்கினர். உரிய நடவடிக்கை எடுப்ப தாக காவல்துறை தலைவர் உறுதிய ளித்ததையடுத்து போராட்டம் கைவிடப் பட்டது.