அரியலூரில் தீர்க்கதிர் சந்தா சேகரிப்பு இயக்கம்
அரியலூர், ஜூலை 13- அரியலூரில் தீக்கதிர் சந்தா சேகரிப்பு இயக்கம் தொடங்கியது. இதில், கட்சியின் மாநிலக் குழு உறுப்பினரும், தீக்கதிர் திருச்சி பதிப்பு பொறுப்பாளருமான ஐ.வி. நாகராஜன் மற்றும் மாவட்டச் செயலாளர் எம். இளங்கோவன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் பி. துரைசாமி, கே. கிருஷ்ணன், ஒன்றியச் செயலாளர் அருண்பாண்டியன், மூத்த தோழர் ஆர். சிற்றம்பலம் ஆகியோர் கலந்து கொண்டனர். மொத்தம் 18 ஆண்டு சந்தா சேகரிக்கப்பட்டுள்ளது.