விழுப்புரம்,ஏப்.27- கள ஆய்வு பணிக்காக இரண்டு நாள் பயணமாக முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் புதனன்று (ஏப்.26) விழுப்புரம் சென்றார், வியா ழனன்று (ஏப்.27) விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்களில் சிறப்பாக சமூக சேவையாற்றிய 13 நபர்களுக்கு மாவட்டத் தில் நினைவு பரிசுகளை முதலமைச்சர் வழங்கினார். அதனை தொடர்ந்து, கடலூர், விழுப்புரம், கள்ளக் குறிச்சி 3 மாவட்ட வளர்ச்சித் திட்டங்கள் பற்றி ஆட்சியர் கள், அதிகாரிகளுடன் அவர் ஆலோசனை நடத்தினார். ஆலோசனை கூட்டத் தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசியதாவது:- அரசால் அறிவிக்கப் பட்ட திட்டங்களை குறிப் பிட்ட காலத்துக்குள் விரைந்து முடிக்க வேண்டும் அறிவித்த நிதியை குறிப் பிட்ட காலத்திற்குள் திட்டங் களுக்கு செலவிடுவதுதான் திறம்பட்ட நிர்வாகமாகும். வேலைவாய்ப்பு திட்டங் கள் உள்ளிட்டவற்றை மாவட்ட ஆட்சியர்கள் தீவிர மாக செயல்படுத்த வேண் டும். துறை அதிகாரிகள் ஒருங்கிணைந்து செயல்படு வது திட்டங்கள் செயலாக் கத்துக்கு ஏதுவாக இருக் கும். மக்களின் அன்றாட தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் திட்டங்க ளில் அதிக கவனம் செலுத்த வேண்டும். அறிவிக்கப்பட்ட திட்டங் கள் எந்த அளவுக்கு செயல் படுத்தப்பட்டுள்ளன என்பதை அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும். கலைஞரின் ஒருங்கிணைந்த வேளாண் திட்டத்தை விவசாயிகள் பயனடையும் வகையில் செயல்படுத்த வேண்டும். குடிநீர், சுகாதா ரம், பட்டா வழங்குதல் உள் ள்ளிட்ட மக்களின் தேவை களை விரைந்து பூர்த்தி செய்ய வேண்டும். முதலமைச்சர் எப்போது வருவார் என எண்ணி பல மாவட்டங்களில் பணிகள் துரிதமாக நடைபெறுகிறது. அதிகாரிகளின் துரித நடவ டிக்கைகளுக்கு பாராட்டை தெரிவித்துக் கொள்கிறேன். களஆய்வின் நோக்கம் நிறை வேறி வருவதில் மகிழ்ச்சி அடைகிறேன். இவ்வாறு அவர் கூறி னார்.