tamilnadu

img

சாதி அமைப்பு ஒழிந்தால்தான் முன்னேற்றம் : கே.ராதாகிருஷ்ணன்

கர்னூல், நவ.29- பிற்படுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கு கல்வி வாய்ப்பை மறுத்தும், படிப்புக்கான உதவிகளை குறைத்தும் மனுஸ்மிருதி சகாப்தத்திற்கு நாட்டை இட்டுச் செல்ல பாஜக அரசு முயற்சிக்கிறது என்று கேரள அமைச்சர் கே.ராதாகிருஷ்ணன் கூறினார். ஆந்திரப் பிரதேச குல விவக்சலுகா சமிதியின் (சாதி பாகுபாடுகளுக்கு எதிரான அமைப்பு) மாநில மாநாட்டை அவர் தொடங்கி வைத்தார். சாதி அமைப்பு ஒழிந்தால்தான் நாட்டில் சமூக வளர்ச்சியும் முன்னேற்றமும் ஏற்படும்.  மேலும் சாதிய சிந்தனையை ஊக்குவிக்கும் அணுகுமுறை யை ஒன்றிய அரசு மேற்கொண்டுள்ளது. பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கான உதவித்தொகை சமீபத்தில் ரத்து செய்யப்பட்டது. வகுப்புவாத பாசிசத்திற்கு எதிரான போரா ட்டம் காலத்தின் தேவை என்றும் அமைச்சர் கூறினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆந்திர மாநிலச் செயலாளர் வி.சீனிவாச ராவ், தெலுங்கானா மாநில செயற் குழு உறுப்பினர் ஜான் பென்ஸ்லி, குல விவக்சலுகா சமிதி  மாநிலச் செயலாளர் மலையத்ரி ஆகியோர் பேசினர்.

;