tamilnadu

img

கிண்டி தடுப்பூசி ஆய்வகத்தில் கோவிட் தடுப்பூசி உற்பத்தி செய்திடுக!

புதுதில்லி, ஜூலை 21- கிண்டி தடுப்பூசி ஆய்வ கத்தில் கோவிட்-19 தடுப்பூசி களை உற்பத்தி செய்ய ஒன்றிய  அரசாங்கம் உரிய நடவடிக்கை கள் எடுத்திட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மக்களவைக்குழுத் தலைவர் பி.ஆர். நடராஜன் வலியுறுத்தி யுள்ளார். நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் வியாழன் அன்று தொடங்கி நடை பெற்றுவருகிறது. நாடாளுமன்ற நடத்தை விதி 377ஆவது பிரிவின்கீழ் அவசரப் பொது முக்கியத்துவம் வாய்ந்த பிரச்ச னைகளை எழுப்பும் நேரத்தில் பி.ஆர். நடராஜன் பேசியதாவது: சுமார் தொள்ளாயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்து கோவிட்-19 தடுப்பூசிகள் உற்பத்தி செய்வதற்கான திட்டம் கடந்த பத்தாண்டுகளாகக் கிடப்பில் போடப்பட்டி ருப்பதை உடனடியாகத் தொடங்க வேண்டும் என்று ஒன்றிய அரசின் கவனத்திற்குக் கொண்டு வர விரும்புகிறேன்.

கிண்டி ஆய்வகத்தில் உற்பத்தி துவக்குக!

தமிழ்நாட்டில் கிண்டியில் உள்ள பிசிஜி தடுப்பூசி ஆய்வகத்தில் பிசிஜி தடுப்பூசிகள் ஏற்கனவே உற்பத்தி செய்யப்பட்டு வந்தன.  எச்எல்எல் எச்பிஎல் திட்டம் (HLL HBL project) சுமார் 100 மில்லியன் பிசிஜி டோசஸ் (BCG doses) உற்பத்தி செய்வதற்கான வல்லமை வாய்ந்ததாகும். இதற்காக அந்நிறு வனம் தமிழ்நாட்டிலுள்ள மருந்துக் கட்டுப் பாட்டாளரிடமிருந்து (Drug Controller) உற்பத்தி  செய் வதற்கான உரிமமும் பெற்றி ருக்கிறது. அங்கே விஞ்ஞானி கள் மற்றும் ஊழியர்களைக் கொண்டு அந்த ஆய்வகம் உள்ள நிலையில் எந்த அள விற்கு உற்பத்தி செய்ய முடியுமோ அந்த அளவிற்கு உற்பத்தி யைத் துவக்கிட தமிழ்நாடு முதலமைச்சரும் தன் விருப்பத்தைத் தெரி வித்திருக்கிறார். எனினும் இதுவரையிலும் எதுவும் நடைபெறவில்லை. ஒன்றிய அரசாங்கம் இதில் தாமதம் செய்வதைப் பார்த்தால், இதனைத் தனியாரி டம் தாரை வார்த்திட தீர்மானித்திருப்பது போல் தெரிகிறது. சுகாதாரம் மற்றும் குடும்ப  நலம் போன்றவற்றில் தனியார்மயக் கொள்கை அறிவுடைமையாகாது. இதனால் மக்களுக்கு அவர்கள் வாங்கக்கூடிய விதத்தில் மருந்துகள் மற்றும் சிகிச்சை களை அளித்திட முடியாது. மேலும் இந்நிறுவனத்தில் ஆயிரத் திற்கும் மேற்பட்ட விஞ்ஞானிகளும் ஊழியர் களும் உரிய ஊதியம் இன்றி தற்போது வேலை செய்து வருகிறார்கள். குறிப்பாக ஒப்பந்தத் தொழிலாளர்கள் அற்ப ஊதியத்தில் பணியாற்றி வருகிறார்கள். எனவே, இந்நிறுவனத்திற்கு உரிய உரிமம் அளித்து, கோவிட்-19 தடுப்பூசிகளை உற்பத்தி செய்திட விரைந்து நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு பி.ஆர். நடராஜன் கோரியுள்ளார்.                (ந.நி.)