திரைக்கலைஞர் சித்தார்த் " ஆளே இல்லாத விமான நிலையத்தில் சுமார் 20 நிமிடங்களுக்கு அதிகாரிகளால் நானும் என் பெற்றோரும் தொல்லைக்கு உள்ளானோம். ஆங்கிலத்தில் பேசக்கூறி கேட்ட போதும் அவர்கள் இந்தியிலேயே எங்களிடம் பேசினர். எதிர்த்து போராடியபோது இந்தியாவில் இப்படித்தான் இருக்குமென கூறினர். வேலையில்லாதவர்கள் அதிகாரத்தை காட்டுகிறார்கள் என்று தனது இன்ஸ்டாகிராமில் தெரிவித்திருந்தார். நடிகர் சித்தார்த் பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இதுகுறித்து மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் மதுரை விமானநிலையத்தில் CISF வீரர்கள் ஹிந்தியில் பேசி கடுமையாக நடந்து கொண்டதாக திரைக்கலைஞர் சித்தார்த் எழுப்பியுள்ள குற்றச்சாட்டு குறித்து உரிய விசாரனை மேற்கொள்ள வேண்டுமென மதுரை விமான நிலைய இயக்குநரிடம் கோரியுள்ளேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.