தாது மணல் கொள்ளை வழக்கு சிபிஐ-க்கு மாற்றம்
தாது மணல் கொள்ளை வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றுவதாக சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும், தனியார் நிறுவனங்களால் அரசுக்கு ஏற்பட்ட இழப்பான ரூ. 5 ஆயிரத்து 832 கோடியை வசூலிக்கவும் உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. தமிழ்நாட்டில் தாது மணல் அள்ளு வதற்கு- ஏற்றுமதி செய்வதற்கு கடந்த 2013-ஆம் ஆண்டுக்கு பிறகு தடை விதிக்கப் பட்டது. ஆனால், தடையை மீறி தாது மணல் அள்ளுவதாக 2016-ஆம் ஆண்டு பொதுநல வழக்கு தொடரப்பட்டது. சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.எம். சுப்பிரமணியம், ஜோதிராமன் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த வழக்கை விசாரித்தது. அப்போது, 7 தனியார் நிறுவனங்கள் சட்டவிரோதமாக தாது மணல் எடுத்ததாக வும், இதனால் அரசுக்கு ரூ. 5 ஆயிரத்து 832 கோடியே 44 லட்சம் இழப்பு ஏற்பட்ட நிலையில், அதை வசூலிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. தமிழக தொழில்துறை தரப்பில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.
இந்த வழக்கில் திங்கட்கிழமை காலை தீர்ப்பு வழங்கிய சென்னை உயர் நீதிமன்றம், “சிறப்புக்குழு, தமிழக அர சுத்துறை செயலாளர்கள் ககன்தீப் சிங் பேடி, சத்யபிரத சாகு ஆகியோர் அளித்த அறிக்கைகள் அனைத்தும் ஏற்றுக் கொள்ளப்படுகிறது” என்று அறிவித்தனர்.
மேலும், இந்த வழக்கில் அரசு அதிகாரி களின் பங்கு குறித்து முழுமையாக விசாரிக்க வழக்கை சிபிஐ-க்கு மாற்றி உத்தரவிட்ட நீதிபதிகள், அனைத்து ஆவணங்களையும் நான்கு வாரத்துக்குள் சிபிஐ-யிடம் ஒப்படைக்க தமிழக காவல்துறைக்கு அறிவுறுத்தினர். பதுக்கி வைக்கப்பட்டுள்ள தாது மணலை ஒன்றிய அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதிகள், சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனங்களின் வரவு - செலவுக் கணக்குகளை ஆய்வு செய்யுமாறு அமலாக்கத்துறை, வருமான வரித்துறைக்கும் உத்தரவிட்டனர்.