ஒரு வழியாக பேரறிவாளன் 31 ஆண்டு சிறை வாழ்க்கைக்குப் பின் விடுதலை ஆகிவிட்டார். மற்ற ஆறு பேர்களும் விடுதலை செய்யப்பட வேண்டும் என்பதே மனிதநேயமிக்கவர்களின் எதிர்பார்ப்பாகும். இந்த விடுதலை, நீண்டகாலச் சிறைவாசி களின் நிலை குறித்து பொதுச் சமூகத்தின் கவனத்தை ஈர்த்துள்ளது. தமிழ்நாட்டிலும் இதர மாநிலங்களிலும் ஆயுள் தண்டனை பெற்ற கைதிகளை பொது மன்னிப்பில் அவ்வப்போது விடுதலை செய்யும் வழக்கம் இருந்து வருகிறது. தமிழ் நாட்டில் அவ்வாறு 12 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் கழித்த ஆயுள் தண்டனை கைதிகள் விடுதலை என்றும், பத்து ஆண்டுகள் சிறை யில் கழித்தவர்கள் விடுதலை என்றும் அர சாணை வெளியிடப்பட்டு விடுதலை செய்வ துண்டு. 2007ஆம் ஆண்டு ஏழு ஆண்டுகள் சிறையில் கழித்த ஆயுள் தண்டனை கைதிக ளும்கூட விடுதலை செய்யப்பட்டார்கள். அதி லும் ஒரே கொலை வழக்கில் குறைந்த தண்ட னையான 10 ஆண்டு தண்டனை பெற்றவ ருக்கு விடுதலை வழங்காமல், அதிக தண் டனை பெற்ற ஆயுள் தண்டனை சிறைவாசி ஏழு ஆண்டுகள் கழித்து இருந்தாலே விடுதலை எனக்கூறப்பட்டு விடுதலையாகிச் சென்றனர்
கொலை வழக்கிலும், கொலைமுயற்சி வழக்கிலும், இதர வழக்குகளிலும் 10 ஆண்டு கள் மட்டுமே தண்டனை பெற்றவர்கள் சிறை யில் விடுதலையாகாமல் இருக்கும்போதே, கொலை வழக்குகளில் ஏழு ஆண்டுகள் கழித்த ஆயுள் தண்டனை கைதிகள் விடு விக்கப்பட்டார்கள். 10 ஆண்டு தண்டனை பெற்றவர்கள் இது பற்றி விளக்கம் கேட்ட போது, ஆயுள் தண்டனை பெற்றவர்களுக்குத் தான் பொதுமன்னிப்பு; உங்களுக்கு இல்லை என்ற விநோதமான பதிலும் வந்தது.
பொது மன்னிப்பு நிபந்தனைகள்
பொது மன்னிப்பில் ஆயுள் தண்டனை சிறைவாசிகளை விடுவிக்கும் போது சில வரையறைகளை நிர்ணயித்து அரசாணை வெளியிடப்படும். அதன்படி தூக்குத் தண்ட னையிலிருந்து ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டவர்களுக்கு பொதுமன்னிப்பு பொருந்தாது என்று ஒருமுறை ஆணையி டப்பட்டிருந்தது. பின்னர் பாலியல் வன்பு ணர்வு மற்றும் கொலை செய்தவர்களுக்கு, வரதட்சணைக் கொடுமை, தீண்டாமை வன்கொடுமை கொலையாளிகளுக்கும், சிறை குற்றம் புரிந்தவர்களுக்கும் பொது மன்னிப்பு இல்லை என்று ஆணை இடப் பட்டிருந்தது. ஆயுத தடைச் சட்டத்தின் படி ஆயுள் தண்டனை பெற்றவர்களுக்கும் பொதுமன்னிப்பு மறுக்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டு வந்தது. ஆயுத தடைச் சட்டத்தின் படி துப்பாக்கி, வெடிகுண்டு, வேல்கம்பு (வேல் கம்பு படைக் கலனாக இருந்துள்ளதால் அது ஆயுத தடைச் சட்டத்தின் கீழ் வரையறுக்கப்பட்டுள்ளது) வைத்து கொலை செய்து தண்டனை பெற்று இருந்தால் அவர்களுக்கு பொது மன்னிப்பு இல்லை என்று கூறப்பட்டது.
புதிய ஆணை
இந்த நிலையில் தற்போது புதிதாக ஒரு ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதாவது ஒரு கொலையில் தண்டனை பெற்று பத்து ஆண்டுகள்,இரண்டு கொலையில் தண்டனை பெற்று 20 ஆண்டுகள் சிறையில் கழித்துள்ள வர்களுக்கு பொது மன்னிப்பில் விடுதலை வழங்கலாம்; ஒரு வழக்கில் மூன்று கொலை களுக்கு மேல் நடந்திருந்தால் அவர்களுக்கு பொது மன்னிப்பு இல்லை எனவும் அர சாணை எண் (M.S)488 நாள் 15.11.2021-ல் கூறப்பட்டுள்ளது. மேலும் அதில் பாலியல் வன்புணர்வு, மோசடி, கொள்ளை, பயங்கர வாத நடவடிக்கை, அரசுக்கு எதிரான குற் றங்கள், சிறையில் இருந்து தப்பித்தல், விஷச் சாராயம் போன்ற வழக்கு பிரிவுகளில் ஆயுள் தண்டனை பெற்றவர்களுக்கு பொது மன்னிப்பு பொருந்தாது எனவும் கூறப்பட் டுள்ளது. மேற்படி ஆணை வெளியிடும் போது, தமிழ்நாட்டில் இவ்வாண்டு 700 ஆயுள் தண்டனை சிறைவாசிகள் பொது மன்னிப்பில் விடுதலை செய்யப்படுவார்கள் என்று சட்ட சபையில் சட்ட அமைச்சர் அறிவிப்பு செய்தார்.ஆனால் தற்போது அந்த எண்ணிக்கைக்கு இவ்வாணைப்படியும், ஏற்கனவே பின்பற் றப்பட்டுவரும் நடைமுறைப்படியும் சிறை வாசிகள் எண்ணிக்கை தேறவில்லை என்றே தோன்றுகிறது. சுமார் 600 சிறைவாசிகள் வரை விடுதலைக்காக தேர்வு செய்யப்பட்டு சிறைத்துறை அதிகாரிகளின் பரிந்துரைக ளுடன் பட்டியல் தயார் செய்யப்பட்டு அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
வேடிக்கையான பொது மன்னிப்பு விடுதலை ஆணைகள்
முன்பு இரண்டு கொலைகளுக்கு மேல் செய்த வழக்கில் தண்டனை பெற்றவர்கள் பலர் பொது மன்னிப்பில் விடுதலையாகிச் சென்று விட்டனர். இதில் வேடிக்கை என்ன வென்றால் 2018இல் இரண்டு கொலைகளுக்கு மேல் செய்த, ஒரே வழக்கில் ஆயுள் தண்டனை பெற்றவர்களில், உடனடியாக கைது செய்யப்பட்டு, பரோலில் அதிக நாள் செல்லா மல் பத்து ஆண்டுகள் கழித்த கைதிகள் விடுதலை ஆகிச் சென்றுவிட்டனர். அதே வழக்கில் சில நாட்கள் கழித்து கைது செய்யப்பட்டதாலும், பரோலில் அதிகநாள் சென்றதாலும் பத்தாண்டுகளுக்கு ஒரு சில நாட்கள் குறைவாக இருந்தவர்களுக்கு பொதுமன்னிப்பு மறுக்கப்பட்டது.அதனால் அவர்கள் இன்றும் சிறையில் இருந்து வரு கிறார்கள். அதாவது ஒரே வழக்கில் ஆயுள் தண்டனை பெற்றவர்களில் ஒருவர் 10 ஆண்டு கள் சிறையில் கழித்து விடுதலை பெற்று சென்று விட்டார்.அதே வழக்கில் ஒரு சில நாட்கள் குறைந்ததால் புதிய அரசாணை யின்படி பொதுமன்னிப்பு இல்லாமல் போனதால் வாழ்நாள் முழுக்க சிறையிலி ருக்க வேண்டியுள்ளது. அப்படி பொது மன் னிப்பு நிராகரிக்கப்பட்ட ஆயுள்தண்டனை சிறைவாசிகள் அனைத்து சிறைகளிலும் அநேகம்பேர் இன்றும் இருக்கிறார்கள். இன்னொரு வேடிக்கை; வெடிகுண்டு, துப்பாக்கி, வேல்கம்பு பயன்படுத்தி கொலைக் குற்றத்தில் ஈடுபட்டு ஆயுள் தண்டனை பெற்றவர்களை ஏற்கனவே உள்ள நடை முறைப்படி பொதுமன்னிப்பு பரிசீலனைக்கு எடுத்துக் கொள்வதே இல்லை. எடுத்துக்காட்டாக 1984 ஆம் ஆண்டில் மதுரை மாவட்டம் வண்டாரி என்ற ஊரில் நடந்த கொலைக்காக ஆயுள் தண்டனை பெற்றவர்களில் ஒரே வழக்கில் தொடர்பு டைய பத்துக்கும் மேற்பட்டவர்கள் 2007ஆம் ஆண்டிலேயே விடுதலையாகிச் சென்று விட்டனர். அந்த வழக்கில் துப்பாக்கி வைத்தி ருந்தார் என்று குற்றம்சாட்டப்பட்ட தங்கராஜ் என்பவருக்கு மட்டும் பொதுமன்னிப்பு மறுக்கப்பட்டு விடுதலையாகாமல் 32 ஆண்டு களுக்கு மேலாக சிறையில் வாடி வதங்கிப் போய் உள்ளார். இதேபோல் கொலையின் போது வேல்கம்பை பயன்படுத்தியவர்க ளுக்கும் பொதுமன்னிப்பு மறுக்கப்பட்டு 25 ஆண்டுகளுக்கு மேலாக பலர் சிறையில் இருந்து வருகிறார்கள். இந்நிலையில்தான் பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டுள்ளது, அனைத்து அரசு ஆணைகளிலும் குறிப்பிடப்பட்டிருந்த விதிமுறைகளுக்கும், நிபந்தனைகளுக்கும் மாறாக எடுக்கப்பட்ட மனிதாபிமான முடிவாக கருதப்படுகிறது. இதனை அடிப்படையாகக் கொண்டு 20 ஆண்டுகளுக்கு மேலாக சிறை யில் வாடும் அனைத்து ஆயுள் தண்டனை சிறைவாசிகளுக்கும் பொதுமன்னிப்பு வழங்கி விடுதலை செய்வதே சரியான நடவடிக்கை யாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கட்டுரையாளர்:
ஓய்வு பெற்ற சிறைத்துறை அதிகாரி