நாடாளுமன்றத் தேர்தல் வரவிருப்பதையொட்டி பிரதமர் நரேந்திரமோடி - அமித்ஷா ஜோடி பெரும் பரபரப் புடன் சுற்றித் திரிகிறது. அவர்கள் இந்த நாட்டின் அமைச்சர்கள் என் பதை மறந்து பாஜக தலைவர்களா கவே மாறி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர், அரசு பணத் தில். குறிப்பாக பிரதமர் மோடி பங்கேற்கும் அரசு நிகழ்ச்சிகளில் எதிர்க்கட்சிகளை வசைபாடு வதையே வேலையாகக் கொண்டி ருக்கிறார். அண்மையில் உ.பி. மாநி லத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய மோடி, பாஜக செய்து வரும் வளர்ச்சிப் பணிகளில் காங்கிரஸ் மற்றும் இந்தியா கூட்டணியினர் தூக்கம் இழந்து தவிக்கின்றனர் என்றுகூறினார். உண்மையில் இந்தியா கூட்டணியினர் பல மாநி லங்களில் உடன்பாடு ஏற்படுத்திக் கொண்டு ஒருங்கிணைந்திருப்ப தைக் கண்டு பாஜகவினர் தான் பயந்து போய் உள்ளனர். அதனால் தான் மோடி வகையறாக்கள் தூக் கம் கெட்டு புலம்பிக் கொண்டிருக் கின்றனர். அதை மறைப்பதற்குத் தான் எதிர்க்கட்சிகளை வசைபாடு கிறார் மோடி. மோடி ஒரு வித்தியாசமான மனி தர் என்பதை இன்று நாடு பார்த்துக் கொண்டிருக்கிறது என்று புள காங்கிதம் அடைந்திருக்கிறார். முன்பு பாஜக ஒரு வித்தியாச மான கட்சி என்று வாஜ்பாய் - அத்வானி காலத்தில் கூறிக்கொண் டிருந்தனர். ஆனால் அதன் சாயம் வெளுத்துப் போனதால் இப்போது மோடி தன்னைத்தானே வித்தியாச மானவர் என்று பெருமை பீற்றிக் கொண்டிருக்கிறார்.
உண்மையில் இவர் வித்தியாச மானவர்தான். அந்த 56 இன்ச் அகல மார்பில் இரக்கத்துக்கு இடமில்லை என்பது 2002 குஜராத் கலவர காலத்தில் ஏற்கனவே நிரூபிக்கப் பட்டது தான். 2014-இல் பிரதமரான பின்பு குஜராத் கலவரம் தொடர் பாக சிறுவருத்தம் கூட தெரிவிக்க வில்லையே என்று செய்தியாளர் களால் கேள்வி எழுப்பப்பட்ட போது, காரில் சாலையில் செல்லும் போது ஒரு நாய் அடிபட்டால் கூட வருத்தம் தெரிவிப்போமே என்று கூறி தன்னை இரும்பு மனிதர் என்று உணர்த்தினார். அதன் தொடர்ச்சி தான் ஓராண்டுக்கு மேலாக விவசாயிகள் தலைநகர் தில்லியின் எல்லைகளில் போராட்டம் நடத்தியபோதும், மல் யுத்த வீராங்கனைகள் தங்களுக்கு நீதிகேட்டுப் போராடிய போதும், மணிப்பூரில் பழங்குடியினப் பெண் களை நிர்வாணப்படுத்தி ஊர்வல மாக இழுத்துச் சென்று பலாத்காரம் செய்து கொன்றபோதும் எவ்விதச் சலனமும் காட்டாமல் இருந்தது வித்தியாசமானது தானே. இப்படி இருக்க மோடியன்றி வேறு யாரால் முடியும்? அப்போதெல்லாம் பெண் களின் துயரங்களைக் கண்டு கொள்ளாத பிரதமர் மோடி, அவர் களது சக்தியை அறிந்து வைத்துள் ளார். அது இப்போது தேர்தலுக்குப் பயன்படும் என்பதால் பெண் சக்தி பற்றி பெரிதாய் வாய் திறக்கிறார். நாட்டில் உள்ள 3 கோடி பெண் களை லட்சாதிபதிகளாக்குவதற்கு எனது அரசு உறுதிபூண்டுள்ளது என்று அதே உ.பி. நிகழ்ச்சியில் பேசியுள்ளார். ஏற்கனவே 10 ஆண்டுகள் பதவியில் இருந்த போது என்ன செய்தாராம்? மூன் றாம் முறையும் பிரதமராக்கினால், 3 கோடிபெண்களை லட்சாதிபதி யாக்குவாராம். நிபந்தனை விதிக்கி றார்.
இவர் ஏற்கனவே கூறிய வாக்கு றுதிகளை நிறைவேற்றியிருந்தால் பல கோடிப் பெண்கள் லட்சாதிபதி களாகியிருப்பார்களே! வெளிநாடு களில் உள்ள கறுப்புப் பணத்தைக் கைப்பற்றி ஒவ்வொருவர் வங்கிக் கணக்கிலும் 15 லட்சம் ரூபாய் போடுவதாகச் சொன்னாரோ! அதைச் செய்திருந்தால் லட்சாதி பதிகள் என்ன, மில்லியனர்களாகி யிருப்பார்கள் பல கோடிப்பேர். ஜன்தன் வங்கிக் கணக்குகள் பல கோடி துவங்கியதாகவும் அதை சாதனை என்றும் கூறும் ஒன்றிய பாஜக அரசு. அந்த கணக்குகளில் 15 லட்சம் செலுத்தியிருந்தால் அவர் கள் அனைவருமே மில்லியனர்கள் தானே! அதைச் செய்திருக்க லாமே! யார் தடுத்தார்? இப்போது 3 கோடி பெண்களுக்கு இவர் இலக்கு வைக்கிறார். எல்லாம் தேர்தல் படுத்தும் பாடுதான். சொன்னதைச் செய்வது பாஜக வுக்கு பழக்கமில்லை. குறிப்பாக மோடி அரசுக்கு அது சுட்டுப் போட்டாலும் வருவதில்லை. விவ சாயிகளின் விளைபொருட்களுக்கு ஒன்றரை மடங்கு விலை தருவேன் என்று மோடி சொன்னது வெறும் தேர்தல் வாக்குறுதி தான். அதை நிறைவேற்ற வேண்டுமென்பது கட்டாயமில்லை என்று அப்போது அமைச்சராக இருந்த அருண் ஜெட்லி உச்சநீதிமன்றத்திலேயே கூறியதே எடுத்துக்காட்டு. அது போல் இதுவும் தேர்தல் ஜூம்லா என்று புரிந்து கொள்வார்கள் பெண்கள்.
இந்த தேர்தலில் 370 இடங்களில் பாஜக மட்டும் வெற்றி பெறும் என்றும் கூட்டணிக்கட்சிகளுடன் சேர்ந்து 400 இடங்கள் கிடைக்கும் என்றும் பாஜகவினர் அமித்ஷா முதல் அனைவரும பேசுகிறார்கள். அது என்ன 370? இதுவும் கூட ஒரு வகையிலான இந்துத்துவா - முஸ்லிம் வெறுப்பு தான். காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய அரசியல் சட்டப்பிரிவு 370. அதை நினைவுபடுத்துவது - இந்து வாக்கு களை குறிவைப்பது என்பதுதான். அதனால் தான் இந்த நேரத்தில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமல்படுத்த விதி முறைகளை அறிவித்தார்கள். இந்தச் சட்டத்தை கொண்டு வரும் போதே கடும் எதிர்ப்புக் கிளம்பியது. நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்றன. இதனால் 4 ஆண்டுகள் கிடப்பில் போட்டுவிட்டு இப்போது அமல் படுத்துவது மதரீதியிலான பிளவை ஏற்படுத்திடும் வாக்கு வங்கி அரசி யல் அன்றிவேறென்ன? ஆனால் இவர்கள் எதிர்க்கட்சி களை பிளவுவாத அரசியல் நடத்து கிறார்கள் என்று குறைகூறு கிறார்கள். ஆனால் மத ரீதியிலான பிளவை ஏற்படுத்தி பதற்றத்தை உருவாக்கி அதில் அரசியல் லாபம் தேடுவதே ஆர்எஸ்எஸ் - பாஜக பரி வாரங்களின் வாடிக்கை, இவர்கள் நம்பிக்கைக்கு உரியவர்கள் அல் லர்; மோசடி அரசியல் நடத்து பவர்கள். ஸ்ரீமான் 420-கள்.
இப்போது இவர்கள் 2047 -இல் வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்கப் போவதாகக் கூறு கிறார்கள். இவர்களது 10 ஆண்டு ஆட்சியில் நாடு பின்தங்கிப் போய்விட்டது. 21-ஆம் நூற்றாண் டில் இவர்கள் பத்தாம் நூற்றாண் டுக்குப் பின்னோக்கி இழுக்கும் திட்டங்களையே தீட்டுகிறார்கள். முன்பு இப்படித்தான் வாஜ் பாய் காலத்தில் “ஒளிரும் இந்தியா” என்று கூறினார்கள். அதை நாட்டு மக்கள் நம்பவில்லை. இப்போது இவர்கள் ‘விக்சித் பாரத்’ - வளர்ச்சி யடைந்த இந்தியா என்கிறார்கள். இவர்கள் கூறும் வளர்ச்சி நாட்டு மக்களுக்கு அல்ல. இவர்களது கூட்டுக்களவாணி கார்ப்பரேட்டு கள் அதானி, அம்பானிகளுக்குத் தான். எனவே இவர்கள் சொல்வது ஒன்றும் செய்வது ஒன்றுமான மோசடி அரசியல் செய்பவர்கள். இவர்கள் ஸ்ரீமான் 420-கள். 370, 400 இவர்களுக்கு கிடைக்கவே கிடைக்காது. பாஜக ஆட்சியில் பத்தாண்டு கள் பட்டதுபோதும் என்று நாட்டு மக்கள் விழித்துக் கொண்டார்கள். இனி ஒருபோதும் படமாட்டார்கள். மதப் பிளவுவாத பாஜக ஆட்சியை அகற்றி நல்லிணக்க இந்தியாவை உருவாக்க இந்தியா கூட்டணியை வெற்றி பெறச்செய்ய மக்கள் உறுதி பூண்டுவிட்டார்கள்.